செவ்வாய், 16 நவம்பர், 2010

நீதிபதி மீது பாலியல் புகார்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  கடந்த 2005ம் ஆண்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்த பிரேம் பிரகாஷ் என்பவர்  பாலியல் பலாத்காரம் செய்ததகவும்,  2 லட்ச ரூபாய் பணம்  மற்ம்  நகைகளை பறித்து கொண்டதாகவும் டில்லியை சேர்ந்த புஷ்ப மீனா என்பவர் போலீசில் புகார்  அளித்துள்ளார். மேலும் அவர் கடந்த 1995ம் ஆண்டு முதல் மாஜிஸ்திரேட்டுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் தனது புகாரில் கூறியுள்ளதாக  போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: