சனி, 20 நவம்பர், 2010

அருமையான வடமாநில அரசியல் கலாசாரம்

கடந்த திங்களன்று அமெரிக்க அதிபர் ஒபாமா பார்லிமென்டில் உரையாற்றினார். அவருடைய பேச்சு முடிந்ததும் சோனியாவும், ராகுலும் கிளம்பினர். வாசலுக்கு வந்தால் அங்கே காரை காணோம். என்ன ஆயிற்று என்று செக்யூரிட்டியை கேட்க, அவர்களுக்கும் விஷயம் தெரியவில்லை. நடந்தது இது தான். பார்லிமென்ட்டிலிருந்து, வாசலிலிருந்த காரில் உட்கார போன ஒபாமா, வண்டியில் அமராமல், தன்னை வழியனுப்ப வந்த சபாநாயகர் மீராகுமாரிடம் பேச ஆரம்பித்தார். பார்லிமென்ட் தன்னை கவர்ந்துவிட்டதாகவும், இங்கு ஏதாவது சரித்திரப் புகழ் பெற்று வரலாற்று சின்னங்கள் ஏதாவது உள்ளதா என்று கேட்டுவிட்டு, காரில் போய் உட்கார்ந்தார். இதனால், ஒபாமா கார் பார்லிமென்டை விட்டு வெளியேறுவது தாமதமாகியது. அவர் வெளியே போகும் வரை பார்லிமென்டின் கேட்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், சோனியாவின் கார் வரவில்லை. சோனியாவும், ராகுலும் நின்றிருந்ததை பார்த்த பா.ஜ., தலைவர் அத்வானி, "ஒபாமாவிற்காக கேட் மூடப்பட்டிருக்கலாம். எதற்கு இங்கு நிற்க வேண்டும். என் அறை பக்கத்தில் தான் உள்ளது. வாருங்கள்... அங்கு அமர்ந்து டீ குடிக்கலாம்' என்று அழைப்பு விடுத்தார். உடனே சோனியாவும், ராகுலும் அவருடன் சென்றனர். அங்கு அத்வானியின் மகள் அமர்ந்திருந்தார். சோனியாவையும், ராகுலையும் வரவேற்ற அவர், "இன்று அப்பாவிற்கு பிறந்தநாள்' என்றார். மகிழ்ச்சியடைந்த சோனியாவும், ராகுலும் உடனே அத்வானிக்கு வாழ்ந்து தெரிவித்தனர். "பிறந்த நாளுக்கு என்ன புரோகிராம்' என்று, அத்வானியிடம் சோனியா கேட்டார். "ஒபாமாவினால் செக்யூரிட்டி பிரச்னை, எனவே நாளைக்கு தான் கொண்டாடப் போகிறோம். நீங்களும் வர வேண்டும்' என்று, இருவருக்கும் அழைப்பு விடுத்தார். சோனியாவும், ராகுலும் டீ அருந்திவிட்டு சென்றனர். "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று ஒரு காலத்தில் நமது கழகங்கள் தொண்ட வறள கூப்பாடு போட்டன. ஆனால், வடமாநில அரசியலில் உள்ள இந்த பண்பாடு எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது கழகங்களுக்கு தெரியவில்லை.

சோனியாவின் ஜிமிக்கி: டில்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் விருந்தளித்தார். இவ்விருந்திற்கு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒபாமா டின்னர் என்பதால், பிரமுகர்கள் குறிப்பாக பெண் வி.ஐ.பி.,க்கள் படு அமர்க்களமாக ஆடைகளில் ஆஜராகியிருந்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். புடவையில் தோன்றிய சோனியா காதில் ஜிமிக்கி அணிந்திருந்தார். ஒபாமாவை அனைவருக்கும் ஜனாதிபதி பிரதிபா அறிமுகப்படுத்தினார். சோனியாவிடம் வந்த ஒபாமாவின் மனைவி மிச்சேல், ஜிமிக்கியை பார்த்து பாராட்டினார். சோனியா சிம்பிளாக உடை அணிந்திருந்தாலும், பார்ப்பதற்கு அழகாக இருந்ததாக, விருந்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். சோனியாவின் ஆடைகளை ஒரு பிரபல டிசைனர் தான் வடிவமைத்தார் என்று
Dindigul S K M Siddique - AbuDhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-20 09:22:48 IST
About North India Culture (Sonia, Ragul and Advani meets at Parliment House Gate), our neibur state (kerala) in any issue with Central, all the MPs and MLAs will join together for the state intrest. We can not expect this with Tamil Nadu Politics. There is a Ego problem is here (Tamil Nadu), After JJ took AIADMK the culture has been changed. once JJ out from Tamil Nadu, we may expect this nice culter....
மணி வி - சென்னை,இந்தியா
2010-11-20 08:40:40 IST
நம் ஊரில்தான் சட்டசபைக்கே புடைவை, வேட்டியோடு போக முடியவில்லையே! அப்படியே போனாலும் வெட்கமில்லாமல் 'பாவாடை நாடா' வசனம் பேசி கூனி குறுக வைக்கும் 'தலை'கள் உள்ளனரே! கழகக் கலாசாரம் அழியும்வரை 'முன்தோன்றிய மூத்தகுடி'த் தமிழனுக்கு மரியாதை இல்லை!...
sundar - chennai,இந்தியா
2010-11-20 08:35:31 IST
தமிழ்நாட்டு அரசியலில் இதுமாதிரி நிகழ்வுகள் நினைத்துகூட பார்க்கமுடியாது தனிபாட்ட முறையில் ஜெயலலிதாவை தாக்கியும், அடித்தால் ஏனென்று கேட்க நாதி இல்லாதவர்கள் என்று தமிழக பிஜேபி மற்றும் கம்யூனிஸ்ட் காரர்களை மிரட்டியும் 6 கொலைசெய்தவர்களை சிறைசாலையில் சுழல் விளக்கு வாகனத்தில் சென்று பார்க்கும் மந்திரிகளும் நினைப்பு வரும்போதெல்லாம் நான் தமிழன் என்பதில் வெட்கபடுகிறேன்......
vettrivel - Melbourne,இந்தியா
2010-11-20 05:11:44 IST
as long as jayalalitha there, it is not possible to have a good gesture in tamilnadu politics. she is the most corrupted lady. she knows only to loot the money. at least DMK steals and gives. i am not saying DMK is perfect. DMK does something better for people. look at the history ADMK was in power almost 20 years, what is the achievement they done....
நன் மாறன் - கலிபோர்னியா,யூ.எஸ்.ஏ
2010-11-20 02:03:28 IST
குமாரவேல், Tell me when Karuna and MGR had good relations after ADMK? Karuna used to say 'komali', 'Malayali, and lot of bad words. Now he is comfortably saying, I learnt from 'periyar, I lerant from MGR etc. It is all because, people have little memory about Karunaniddhi. He is no 1 manipulator of truth and full of falsehood and haterd, Dont blame Jaya for this....
Ramanujam - delhi,இந்தியா
2010-11-20 00:32:47 IST
தி.மு.க., வெளியே போனால், அதனால் குறையும் 18 எம்.பி.,க்களை எப்படி சமாளிப்பது, அ.தி.மு.க.,விடம் ஒன்பது எம்.பி.,க்கள் தான் உள்ளனர். மற்ற எம்.பி.,க்களை கொண்டு வருகிறோம்' என்று, ஜெயலலிதா சொன்னாலும், அதை காங்கிரஸ் நம்ப தயாராக இல்லை. "ஜெயலலிதாவிடம் மாட்டிக் கொண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பட்ட அவஸ்தை போதாதா?' என்கின்றனர் சில காங்கிரஸ் தலைவர்கள். தற்போது டில்லி அரசியலில் ஒரே குழப்ப நிலை, உபயம் நமது தமிழக அரசியல் தான். Please send this clip to Mr Cho...
செல்லபாண்டியன் - mumbai,இந்தியா
2010-11-20 00:22:44 IST
எம் ஜி ஆர் வந்த பின்புதான் ஹீரோ வில்லன் கலாச்சாரம் அரசியலில் புகுந்தது. எள்ளளவும் கருணாதியை மனித உருவில் மதிக்கவே இல்லை. ஆங்கங்கே சில பூசிமொழுகு வேலைகள் தான் நடந்தது .தமிழக மக்களும் இன்னமும் தலைப்பை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்...
தியாகராஜன் - Chennai,இந்தியா
2010-11-19 11:36:00 IST
இதான் டெல்லி உச்சச்ச்சா ! தி.மு.காவுக்கு ஜால்ரா போட்டு ராஜா மேட்டரை முழுவதுமே மறைக்கிரிரே?...
vivek - lakeside,சிங்கப்பூர்
2010-11-19 07:03:22 IST
இதுதான் ஜனநாயகம் ,,,,,....
Michael - Muscat,இந்தியா
2010-11-19 06:53:17 IST
ஜெயலலிதா அரசியலில் இருக்கும் வரை இது தொடரும் ....
sakthivelu - Geoje,தென் கொரியா
2010-11-19 05:43:45 IST
Well said and Very nicely quoted Mr. Kumaravel. Me too learnt about the relationship between Rajaji and Periyaar. One incident shows, how much they respect each other. After a meeting in Rajaji's house he offered viboodhi to Preiyaar, though he is non- believer of God, he took and put on his forehead to respect the nature of Rajaji, that " he wishes good for his opponent too." Now a days its becoming like " street fights ". One to One instead of principle to principle....
raju - bangalore,இந்தியா
2010-11-19 02:05:04 IST
பாமிலி பொலிடிக்ஸ் நடக்கிறது தமிழ் நாடு ல.அன்புள்ள தமிழ் மக்கள விளித்தெளுங்கள்...
நிசமுடீன் mohammed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-19 01:13:17 IST
தமிழகத்தில் அதுவும் திமுகாவும் அதிமுகாவும் தான் எந்த நேரமும் எதிரிகளாக இருக்கிறார்கள். அல்லது பக்கத்தில் இருக்கும் கேரளாவிலோ, அல்லது ஆந்திராவிலோ சட்டசபையிலும், பொது மேடைகளிளும்தான் எதிரும் புதிருமாக இருப்பார்கள். மற்றபடி அவர்கள் கண்ணியத்துடனும், பண்பாடுனடும் நடத்து கொல்கிறார்கள். இந்த பண்பாடு தமிழகத்தில் என்று வருமோ?...
kumaravel - mysore,இந்தியா
2010-11-17 07:41:14 IST
Even in tamilnadu politcal culture was there up to 1987.Peryar and Rajaji were opposite polls .but both had very good relations.Anna and Karunanidhi always respected Kamaraj.MGR and Karunanidhi also had good relations But only after Jayalalitha entered in politics deterioration of political culture started. Now also other than DMK and ADMK all other party leaders shows respect to others. Only DMK and ADMK are mainly to blame for deteriotion of moral standard ,political culture in taminadu...

கருத்துகள் இல்லை: