சனி, 20 நவம்பர், 2010

ருஹுணு பல்கலை மாணவி நதீகா சுபாஷினி மறைவு : 9 மாதங்களுக்குப் பின் சடலம் மீட்பு!

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்த ருஹுணு பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவி நதீகா சுபாஷினியின் சடலம் மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடம் ஒன்றிலிருந்து நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.

மாத்தளை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சமத் மதநாயக்க, சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே. விஜயவீர ஆகியோர் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்தைக் கயிற்றின் உதவியுடன் சென்றடைந்தனர்.மாணவியின் உடல் பாகங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை: