வியாழன், 24 ஜூன், 2010

SMS எ‌‌ஸ்ஸை ந‌ம்‌பி ரூ.57 ல‌ட்ச‌‌த்தை மோசடி கு‌ம்ப‌லு‌க்கு கொடு‌த்து இழ‌ந்‌‌திரு‌க்‌கிறா‌ர் செ‌ன்னை பெ‌ண்

மயிலாப்பூரை சேர்ந்த பூஜா (பெயர் மாற்றம்) எ‌ன்பவ‌ரி‌ன் செல்போனுக்கு கடந்த மாதம் ஒரு எஸ்.எம்.எஸ். வந்து‌ள்ளது.அதில், “உலககோப்பை கால்பந்து போட்டியையொட்டி நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையைப் பெற கீழ்கண்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து இ‌ன்ப அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த பூஜா, உடனே அந்த இ-மெயிலுக்கு தனது முகவரியை அனுப்பி உ‌ள்ளார். அதன் பிறகு அவருக்கு வந்த இ-மெயிலில், “உங்கள் பரிசுப் பணத்தை ஒப்படைக்க இங்கிலாந்தில் சில சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. இதே போல் இந்தியாவில் சுங்கத் துறைக்கும் பணம் செவழிக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை ந‌ம்‌பிய பூஜா ரூ.57 லட்சம் வரை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பணம் செலுத்தி ஒரு மாதம் ஆகியும் குலுக்கல் பரிசு பணம் வந்து சேரவில்லை. அ‌ப்போதுதா‌ன் தா‌ன் ஏமா‌ற்ற‌ப்ப‌ட்டதை பூஜா உண‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.
இதைய‌டுத்து செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்து‌ள்ளா‌ர் பூஜா. இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌‌ரி‌த்த மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌‌யின‌ர், ஜல்பிகார், ஜரியார், ஜாவித்கான், இம்ரான் ஜாரி ஆகியோர் பெயரில் உள்ள தனியார் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்த மர்ம நபர்கள் பற்றிய விவரங்களை வங்கி அதிகாரிகளிடம் காவ‌ல்துறை‌யின‌ர் சேகரித்து வருகி‌ன்றன‌ர்.
இ‌ந்த பண‌த்தை டெல்லி, மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் அ‌ந்த ம‌ர்ம நப‌ர்க‌ள் எடுத்துள்ளனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் உள்ள ரக‌சிய கேமராவில் பதிவான படங்களை பார்க்க காவ‌ல்துறை‌யின‌ர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் எளிதில் மோசடி கும்பலை கண்டுபிடித்து விடலாம் என்று காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்து‌ள்ளன‌ர்.
போலி பெயர்களில் கணக்கு தொடங்கி இருந்தால் ம‌ர்ம கு‌‌ம்பலை கண்டுபிடிப்பது கடினம் எ‌ன்று‌ம் ஏ.டி.எம். மையங்களில் வேறு நபர்களை வைத்து பணம் எடுத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது எ‌ன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
காவ‌ல்துறை‌யினரு‌க்கு கடும் சவாலாக திகழும் இந்த எஸ்.எம்.எஸ். பரிசு குலுக்கல் மோசடி கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: