சனி, 26 ஜூன், 2010

திரு.நோயல் நடேசன் அவர்கள் கலந்து கொள்கின்றார,டான் தமிழ் ஒளியின் அரசியல் களத்தில்

டான் தமிழ் ஒளியின் அரசியல் களத்தில் புலம்பெயர்ந்த தமிழர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளரும் அவுஸ்திரேலிய உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான திரு.நோயல் நடேசன் அவர்கள் கலந்து கொள்கின்றார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த வாரம் இலங்கைக்கு சென்றிருந்த புலம்பெயர்ந்த தமிழர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளரும் அவுஸ்திரேலிய உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான திரு.நோயல் நடேசன்; கடந்த வியாழனன்று புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.ய+.குணசேகரவை சந்தித்து புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நலன் குறித்த கலந்துரையாடியுள்ளார். அதே வேளை புனர்வாழ்வு ஆணையாளர்நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 400 பெண் போராளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் வைபவம் வெள்ளியன்று (25.06.2010) தம்பதெனியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெண் போராளிகளின் பெற்றோர்கள் யாழ்ப்பாணம், வவுனியா பிரதேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்விலும் திரு. நோயல் நடேசன் கலந்து கொண்டார். டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நேரம் 6.30 மணியிலிருந்த 10.30 மணி வரை நடைபெறும் அரசியல் களம் நிகழ்ச்சியில் இந்த வார  (26.06.2010) அரசியல் களத்தில் திரு. நோயல் நடேசன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.அவருடனான உங்களது உரையாடல்களுக்கு நீங்கள் அழைக்கவேண்டிய  தொலைபேசி இலக்கம் : 00 94 112 62 30 62

கருத்துகள் இல்லை: