வியாழன், 24 ஜூன், 2010

50 மேற்பட்ட தொல்பொருள் இடங்களை புலிகள் பதுங்குழிகளாக பயன்படுத்தியுள்ளதாக

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 50  மேற்பட்ட தொல்பொருள் இடங்களை விடுதலை புலிகள் பதுங்குழிகளாக பயன்படுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்.எல்லாவல மேதானந்த தேரர் டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேலும், வவுனியா, அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 1633 தொல்பொருள் இடங்களை விடுதலை புலிகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இடங்களை கண்கானிப்பதற்காக வேண்டி தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திடம் கையளிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்க வேண்டும் என வணக்.எல்லாவல மேதானந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: