சனி, 26 ஜூன், 2010

சுதர்சனம் மறைவு:செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற, காங்கிரஸ் தலைவரும்

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற, தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம் காலமானார்.

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கடந்த 23ஆம் தேதி கோவை வந்தார். திடீர் நெஞ்சுவலி காரணமாக, 24ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆபரேஷன் நடந்தது. சுதர்சனம் எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

மறைந்த சுதர்சனம் உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை: