செவ்வாய், 22 ஜூன், 2010

யாழ் நூல் நிலைய எரிப்புக்கு தமிழ் சமுதாயத்திடம் மன்னிப்பு கோரினார் சம்பிக்க ரணவக்க!

தான் சார்ந்த சமூகத்தினால் யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டமைக்கு மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார். யாழ் நூலைநிலையத்திற்கு புத்தகங்கள் சிலவற்றைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரினார்.

இந்நிகழ்வில் ஜாதிக ஹெல உறுமயவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஒமல்போ சோபித தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: