புதன், 23 ஜூன், 2010

புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை தேடும்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களை தேடும் நடவடிக்கைகளை இலங்கைப் படையினர் ஆரம்பித்துள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்களை விடுதலை புலிகள் நுட்பமான முறையில் மறைத்து வைத்துள்ளதாக இலங்கைப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு பாரிய கொள்கலன்களில் இந்த வெளிநாட்டு நாணயங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பினர் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள படைத் தரப்பு, குறித்த இரண்டு கொள்கலன்களிலும் மறைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி தொடர்பான தகவல்களை வெளியிடப்படவில்லை. நாணயத்தாள்கள் மறைத்து வைக்கப்பட்ட கொள்கலன்களை தேடும் பணிகளுக்கென விசேட பிரிவொன்றையும் பொலிஸார் நியமித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: