புதன், 23 ஜூன், 2010

பிரதீபா பாட்டீல், உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த, வாழும் மொழியாக தமிழ்

உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த, வாழும் மொழியாக தமிழ் திகழ்கிறது. மிகவும் சிறப்பான இலக்கண, இலக்கியங்கள் தமிழில் நிறைந்து காணப்படுகின்றன என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறினார்.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை இன்று ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.

எல்லா மதங்களுக்கு இடையிலும் மரியாதை காட்டிய இனம் தமிழ் இனம்.தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் எல்லா சமூகத்தினரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வாழும் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் கூடியதாக உள்ளன.
தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துகள் மூலம்,. அப்படிப்பட்ட அமைப்பு முறை இருப்பதைக் காண முடிகிறது. இதனால் பொருளாதார, நிர்வாக ரீதியில் தன்னிச்சையாக செயல்படக் கூடிய வகையில் கிராம மக்கள் செயல்படுகின்றனர். இதுபோன்ற நிலை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த, வாழும் மொழியாக தமிழ் இருக்கிறது. மிகவும் சிறப்பான இலக்கண, இலக்கியங்கள் நிறைந்ததாக தமிழ் திகழ்கிறது.சங்க காலத்தில் பெண் புலவர்களும் கவிதைகள் இயற்றி இருக்கிறார்கள் என்பது, அந்த காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கின்றது.
நன்னெறியைப் போதித்த அற்புதமான ஆசிரியராக திருவள்ளுவர் இருக்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை தமிழின் பெருமையை பறைசாற்றுபவையாக உள்ளன.சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்க் கவிஞர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பாடல்கள்தான் நாட்டின் எல்லா நிலைகளுக்கும் சுதந்திர உணர்வைப் பரவச் செய்தன” என்றார்.

கருத்துகள் இல்லை: