வியாழன், 6 பிப்ரவரி, 2020

பெரியாரியம் என்பது அடிப்படை உண்மையை சொல்வது .. எது உண்மையோ அதை சொல்வதே திராவிடம்.

Devi Somasundaram : பெரியாரியம் என்பது ஆரியத்திற்கு எதிரானது என்று மட்டும் புரிந்து கொள்ளப் படுவதை தடுக்கப் படனும் .
பெரியாரியம் என்பது அடிப்படை உண்மையை சொல்வது ..
ஆரியம் எதை செய்யச் சொல்கிறதோ அதற்கு எதிரா செய்வது தான் திராவிடம் என்று சொல்வது அரைகுறைத்தனம் .அப்ப நாளைக்கு பாப்பான் வாயல சாப்டுன்னு சொன்னா அதுக்கு எதிரா வேற எதாலயாச்சுமா சாப்டுவோம் ..
திராவிடம் என்பது எது நிஜமோ அதை சொல்வது தான் .
பாப்பான் சாதி இருக்குன்னு சொல்வதால மட்டும் சாதிய எதிர்க்கல .சாதி என்பது நிஜமாவே கிடையாது அதனால தான் சாதி இல்லன்னு சொல்கிறோம் .
பாப்பான் தன்னை விட மேல்சாதி பொண்ணை அதை விட கம்மியான சாதிகாரன் கட்டக் கூடாதுன்னு சொல்றான் அதனால மேல்சாதி பொண்ணை கட்டுவது தான் சாதி ஒழிப்புன்னு சொல்வது பகுத்தறிவில்லை .
பெரியார் சாதி மறுத்து தான் கல்யாணம் செய்யச் சொன்னார் .அது மேல் சாதி பொண்ண கட்டுவதுன்னு அர்த்தம் இல்லை ..அப்படி சொன்னா அப்ப ஒடுக்கப் பட்ட சாதிப் பெண்களை பகுத்தறிவாளர் கட்டிக்ககூடாதுன்னு அர்த்தமா ? ..
சாதி மறுப்பை அடிப்படை அறிவியலில் இருந்து பேச பழகுங்க ..சாதின்னு ஒன்னு கிடையாது . சாதிக்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை . சாதி என்பது கடவுள் நம்பிக்கை மாதிரி வெறும் நம்பிக்கை தான்..,it's a state of mind ..
திராவிடம் என்பது உண்மை ...ஆரியம் உண்மைக்கு எதிரானது என்று சரியாப் புரிஞ்சுக்கலன்னா நாம பகுத்தறிவாளர்னு சொல்லிப்பதில் அர்த்தம் இல்லை..
ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்று மட்டுமே கட்டமைப்பது திராவிடத்தை சார்பு நிலைப்படுத்தி விடும் ..

காதல் என்பது சாதி, மத, பொருளாதார, என்று எந்த வேறுபாடும் பார்க்காமல் வருவதே சரி..( என்னை என் அறிவுக்காக , தெளிவுகாக அல்லாமல் என் சாதிகாக காதலிக்கப் படுவது எனக்கு நேரும் அவமானம் . .அதுக்கு என் போட்டோ போட்டு அழகுகாக காதலிச்சுட்டு போய்டலாம் .) .
தன்னை விட உயர்ந்த சாதி பெண்ணை கட்டுவதே சாதி ஒழிப்புன்னு சொல்லிட்டு அதை கொள்கை தெளிவுன்னு வேற சொல்லி படுத்தாதிங்க
எது உண்மையோ அதை சொல்வதே திராவிடம்.

கருத்துகள் இல்லை: