வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ் சீனாவில் உயிரிழப்பு 630 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 630  ஆக உயர்வு தினத்தந்தி :  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

நேற்று மட்டும் 69 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், 2,447 பேர் புதிதாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 817-க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: