வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

அரசு மருத்துவ மனைகளை அதானிக்கு கொடுக்க அமைச்சர் விஜபாஸ்கர் கொடுத்த அழுத்தத்தால் மருத்துவர் மரணம்?

Don VS : அரசு மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் அவரகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அதிகமான புற அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பால் 52 வயதில்
கொல்லப்பட்டிருக்கிறார்.
என்ன புற அழுத்தம்?
இரண்டு வருடங்களாக அரசு அவர் பார்த்த வேலைக்கு சம்பளம் தரவில்லை ; கட்டாய டிரான்ஸ்பர் ; அதிகப்படியான பணி நெருக்குதல்.
ஏன்? என்ன காரணம்?
அமைச்சர் விஜயபாஸ்கர் ஒத்துக்கொண்டு கையெழுத்து போட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராடியதால்.
அரசு மருத்துவமனைகளை அதானிக்கு கொடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்ததால்.
அட, நமக்கு இதுவா முக்கியம், பாருங்க விஜயபாஸ்கர் சட்டையில சேறு ஒட்டிட்டு இருக்கு ; இன்னும் பாருங்க, விஜயபாஸ்கர் சைக்கிள்ல போறார்..
வாழ்க அமைச்சர் விஜயபாஸ்கர் ; வாழ்க எடப்பாடி பழனிச்சாமி

Bilal Aliyar : · குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடியாத உபி அரசை காப்பாற்ற கஃபில்கானை கூண்டில் ஏற்றினார்கள் அந்த நிலைமை தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்று போராடிய மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இன்று இழந்து நிற்கிறோம். தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு ஸகாண்டிநேவியன் நாடுகளுடன் தான் ஒப்பிட பட வேண்டுமே தவிர மற்ற வடஇந்திய மாநிலங்களுடன் அல்ல என்று அரை நூற்றாண்டுகளாக எழுதிய பொருளாதார வல்லுனர்களின் கூற்றை, எடப்பாடி தலைமையிலான அடிமை அதிமுக அரசு மாற்றி வருகிறது... ஒரே இந்தியா என்று சொல்லி உத்திர பிரதேசத்தை போல தமிழகத்தை மாற்றி கொண்டிருக்கின்றனர்

கருத்துகள் இல்லை: