புதன், 12 செப்டம்பர், 2018

பள்ளர் சமுக மக்களின் நிலத்தை விழுங்க கூட்டணி ... ஆண்டாள் கோயில் ஜீயர் , ஜான் பாண்டியன் .. பஜ்ரங் தள் சரவணா கார்த்திக்

Shankar A : இன்று பள்ளர் சமூக தலைவர் ஜான் பாண்டியன், ஆண்டாள்
கோவிலுக்கு சென்று ஜீயரை சந்தித்தார். ஆண்டாளையும் தரிசித்தார்.
பள்ளருக்கு ஆண்டாள் சன்னதியில் என்ன வேலை ?
ஜீயர் மடத்துக்கு சொந்தமாக திருவில்லிப்புதூர் வட்டம், கொளுஞ்சிப்பட்டி கிராமத்தில், 60 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் இருக்கின்றன. அந்த விவசாய நிலங்களில், பள்ளர் சமூகத்தினர் காலங் காலமாக, விவசாயம் செய்து வருகின்றனர். வருடத்துக்கு 10 சதவிகித விளைச்சலை அவர்கள் மடத்துக்கு தந்து விட வேண்டும் என்று ஒப்பந்தம். இது சிக்கலில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
இந்த விளை நிலங்களை தற்போது, தற்போது, வீட்டு மனைகளாக மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது.
இப்படி மாற்றும்போது, அந்த நிலங்களில் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் பள்ளர்கள், நிலத்தை விட்டுக் கொடுக்கையில் பிரச்சினை செய்யக் கூடாது என்பதற்காகவே இன்று பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த விவகாரத்தை முன்னின்று நடத்துவது மூவர். சோடா பாட்டில் ஜீயர், ஜான் பாண்டியன் மற்றும், முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இன்னாள் பஜ்ரங் தள் நிர்வாகி சரவண கார்த்திக்.
நல்லா இருக்குடா உங்க கூட்டணி.

கருத்துகள் இல்லை: