வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

மோடியை சந்தித்த தமிழக தொலைக்காட்சிகள் ... ஏன் டிவி விவாத மேடைகளுக்கு வரவில்லை? பணம்?

Muralidharan Pb : 1991 - 1996ல் அரசியலை கவனித்து
வந்தவர்களுக்கு நன்கு
தெரியும். அன்றைய ஆட்சியில் நடந்த அராஜகங்களை தோலுரித்து காட்டி மக்கள் மத்தியில் உண்மையை உரைத்ததில் பெரும் பங்கு ஆங்கில இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ், தமிழில் திணமணி மற்றும் ஜூனியர் விகடன், நக்கீரன், தராசு. குறிப்பாக ஆட்சி அவலங்களை எந்த சார்புமின்றி படம் பிடித்து காட்டியது மேற் சொன்ன கடைசி மூன்று இதழ்கள்.
அதன் விளைவே ஆட்சி மாற்றம் என்றால் அதில் தவறில்லை.
அதைவிட பன்மடங்கு தவறுகள் நடந்தது 2011-2016 ஆட்சி. அதை மக்களுக்கு சொல்லத் தவறியதால் நிறைய தொல்லைகள் இன்று வரை தமிழ்நாடு அனுபவிக்கிறது.

தமிழகத்தின் நான்காவது தூண் நேற்று நடந்த பிரதமர் சந்திப்பில் மிகவும் ஐயப்பாட்டுக்குள்ளாகியுள்ளது.
பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் கொடுத்ததை குழி தோண்டி புதைத்து விட்டது அந்த சந்திப்பு.
நடுநிலை?
இனி அப்படி ஒன்று இருக்க போவதில்லை என்பது இன்று துரத்தப்பட்ட ABN செய்தி நிறுவன ஊடக நிருபர்கள் பதவி விலகியதே சான்று.
வாழ்க பத்திரிகை சுதந்திரம்.

கருத்துகள் இல்லை: