சனி, 21 ஜூலை, 2018

ஜெர்மனி ஓடும் பேருந்தில் 14 பேருக்கு கத்திக்குத்து


ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேருக்கு கத்திக்குத்துமாலைமலர் :ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின்: ஜெர்மனி வடக்கு பகுதியில் உள்ள லூயிபெக் நகரில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் தனது இறுக்கையை மூதாட்டி ஒருவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த மற்றொரு நபர் இறுக்கையை விட்டுக்கொடுத்தவரின் மார்பில் திடீர் என கத்தியால்  குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த பலரையும் அந்த நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
 விபரீதத்தை அறிந்தது பேருந்து ஓட்டுனர் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தியதிய பிறகு உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை நிகழ்த்திய 34 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் அவர் இந்த தாக்குதல் நடத்தியதற்கான காரணம் விளங்கவில்லை என கூறிய போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: