செவ்வாய், 17 ஜூலை, 2018

சென்னை.. மயக்க ஊசி போட்டு 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 7 மாதத்தில் 17 பேரால் பலாத்காரம்

17 பேர் மாறி மாறி.. புகாரால் அதிர்ச்சி 17 பேர் மீது புகார் tamil.oneindia.com/ Kalai Mathi: சென்னை: அயனாவரத்தில் வாய் பேசமுடியாத காது கேளாத 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதத்தில் 17 பேர் பலாத்காரம் செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என யாரையும் விட்டு வைப்பதில்லை இந்த காமவெறியர்கள்.
இந்நிலையில் சென்னையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 17 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் குலை நடுங்கச் செய்துள்ளது.
< சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் இன்று ஒருபெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





வாய் பேசமுடியாத காதுகேளாத சிறுமி

அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக்கூறப்படுகிறது.




வாய் பேசமுடியாத காதுகேளாத சிறுமி

அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக்கூறப்படுகிறது.




பாலியல் வன்கொடுமை

சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது.




17 பேர் மாறி மாறி..

இந்த விவகாரம் அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், வாயிற்காவலர் என மற்றவர்களுக்கும் தெரியவர அவர்களும் சிறுமியை பங்குபோட்டுள்ளனர். மொத்தம் 17 பேர் சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.




பரிசோதனை செய்த தாய்

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்தக் கொடுமை அச்சிறுமிக்கு நடந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை நாளுக்குள் நாள் மோசமடைந்து வந்ததால், உடல்நிலை சரியில்லையோ என தாயார் பரிசோதித்து பார்த்துள்ளார்.




சொல்ல தெரியாத சிறுமி

அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை அறிந்து தாயார் அதிர்ச்சி அடைந்தார். தன்னை யார் பாலியல் வன்கொடுமை செய்தது ? என்பதை சரியாக கூற முடியாத நிலையில் சிறுமி இருந்துள்ளார்.




17 பேர் மீது புகார்

இருப்பினும் சிறுமியின் பேச்சை உணர்ந்து கொள்ளும் அவரது தாயார், அனைத்து உண்மைகளையும் கேட்டு அறிந்துள்ளார். சிறுமி அளித்த தகவலின் பேரில், 17 பேர் மீது அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.




3 பேரிடம் விசாரணை

இதையடுத்து உடனே அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய நிலையில் காவலாளிகள், பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர் என 18 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: