புதன், 28 டிசம்பர், 2016

அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்த்ராஜ் விலகல் .. கலைஞரிடம் மன்னிப்பு கேட்பேன் !

அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடிகர் ஆனந்தராஜ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இப்போதும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான். செங்கோட்டையன், பொன்னையன் போன்றோரின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. ஒருவரை உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதாவை இழிவுபடுத்த வேண்டாம். ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவருடன் யாரையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். மக்கள்தான் யார் தலைவர்? என சொல்லவேண்டும். தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும். நாளை பொதுக்குழுவில் யார் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டாலும் வாழ்த்துக்கள். அ.தி.மு.க.வில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கு முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டேன். வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திப்பேன். மாலைமலர்

கருத்துகள் இல்லை: