திங்கள், 26 டிசம்பர், 2016

மும்பை 3600 கோடி ரூபாய் சிவாஜி சிலையில் இருந்து மின்சாரம் எடுத்து முழு மகாராஷ்டிராவுக்கும் வழங்குவோம் .. டப்பிங் கீரோ தத்துவம்

Image may contain: 1 person, standing, hat and outdoor
மும்பையில் கட்டப்படும் சிவாஜி சிலையில் வரப் போகும் உலகத்தரமான சிறப்பம்சங்கள்:

1.சிவாஜி கையில் இருக்கும் அந்த வாள், சோலார் தகடுகள் பொறுத்தப்பட்டு அதில் இருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் மொத்த மும்பை நகரத்தையே ஒளியூட்டலாம்.
2.இந்த சிலையின் அடித்தளத்தில் பொருத்தப்படும் சுத்தீகரிப்புத் தகடுகள் மூலம் மொத்த மும்பை நகரத்திற்கே தூய்மையான நீரை வழங்கலாம், இந்த சிறப்பு சுத்தீகரிப்பு நீர் கங்கையை விட தூய்மையானதாக இருக்கும். 3.இந்த சிலையின் மீது இருக்கும் நவீனமான கருவி மும்பை முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை கண்காணிக்கும்.
4. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அங்கு வந்து செல்பி எடுத்தால் முகம் படத்தில் கருப்பாகவே விழும் டிஜிட்டல் மேக் இன் இந்தியா டெக்னாலஜி
5.இந்த சிலை மீது பொருத்தப்பட விருக்கும் ரேடார் கருவி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக் கடலில் கால் வைக்க இயலாத அளவிற்கு நுட்பமாக கண்காணிக்கும்.

6.அப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதையும் மீறி வர முயன்றால் சிவாஜியே கடலில் இறங்கி அவர்களை பின்புறமாக எத்துவார்.
7.இந்த சிலைக்கு விரைவில் யுனெஸ்கோ விருது கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்
இவை எல்லாம் மிகவும் ரகசியமானவை, இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள், இதை ரெண்டாயிரம் ரூபாய் தாளில் நேநோ சிப் வைத்தவர் தான் வடிவமைத்துள்ளார்.. முகநூல் பதிவு  முத்து கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: