செவ்வாய், 7 ஜூன், 2016

நைஜீரியர்கள் இந்தியாவில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்கிறார் கோவா முன்னாள் முதல்-மந்திரி

கோவா முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி ரவிநாயக் நைஜீரியர்கள் இந்தியாவில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “நைஜீரியர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவதை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் நைஜீரியவர்களால் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கோவாவில் இருக்கும் நைஜீரியர்களின் ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுப்படும் அனைவரும் உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும். கோவாவில் மாணவர்கள் மீது சில நைஜீரியாக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கோவாவிற்கு நைஜீரிய சுற்றுலா பயணிகள் தேவையில்லை பெங்களூரில் கூட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கும் நைஜீரியகாரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லா இடங்களிலும் பிரச்சனையை மேற்கொள்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: