வியாழன், 9 ஜூன், 2016

பாகிஸ்தான் : அல்லாவின் ஆட்சியில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள்

தப்பஸும் அத்னான் ஒரு பெண் எழுந்து என்னிடம் ”உங்களுடைய குழந்தையின் முகத்தில் அவளின் தந்தையே ஆசிட் விசீனால் அந்த இடத்தில் மன்னிப்பதை பற்றி யோசிப்பீர்களா?” என்றாள். நான் வாயடைத்து நின்றேன்
பாகிஸ்தானைச் சேர்ந்த தப்பஸும் அத்னான் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டு மனித உரிமை பாதுகாவலராக பணியாற்றுபவர்.
தப்பஸும் அத்னான்
13 வயதில் திருமண செய்யப்பட்டவர் 20 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயாகவும், 30 வது வயதில் கணவனால் கடுமையாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதால் மணமுறிவும் பெற்றவர். அப்போது எந்தவித பொருளாதார ஆதரவும் இன்றி துரத்தப்பட்டார்.

5 வருடங்களுக்கு பிறகு, மனித உரிமைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டதன் விளைவாக 2013 ல் சகோதரிகள் அமைப்பு அவரால் உருவாக்கபடுகின்றது.
சகோதரிகள் அமைப்பின் மூலமாக “நிலுவையில் உள்ள பல பாலியல் வல்லுறவு குற்றங்கள், ஆணவக் கொலைகள் மற்றும் ஆசிட் வீச்சு வழக்குகள் போன்றவற்றில் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி போலீசிடமும் நீதிமன்றத்திடமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லீம் நாட்டில் உள்ள ஒரு என்.ஜி.வோவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இவருக்கு நெல்சன் மண்டேலா – கிராசா மகலேஸ்  புத்தார்வ விருது வழங்கப்பட்டுள்ளது.  ஏகாதிபத்தியங்கள் இவரைப் போன்றவர்களை பயன்படுத்திக் கொள்ளும் அபாயத்தை விட இவர்களைப் போன்ற எளிய மக்களுக்கு மதவெறியர்கள் தோற்றுவித்திருக்கும் அபாயம் தான் முதன்மையானது.
அவருடைய சொந்த வாழ்வில் ஏற்ப்பட்ட அனுபவங்களையும் அவருடைய பகுதிகளில் பெண்களின் நிலையை பற்றியும் அவர் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.
எப்படி உங்களால் சகோதிரிகள் அமைப்பை பாகிஸ்தானில் அமைக்க முடிந்தது?
பாகிஸ்தானில் இருக்கின்ற அமைப்புகள் பெண்களின் பிரச்சினைகளை தவிர்க்கின்றனர். யாரும் பெண்களின் குரல்களை முன்னெடுத்து செல்வதில்லை. இதிலிருந்துதான் பெண்களுக்குக்கான ஒரு அமைப்பு வேண்டும் என்று தோன்றியது.
மேலும் ஆசிட்டால் தாக்கப்பட்ட குழந்தையின் தாயும் நானும் சேர்ந்து பல அமைப்புகளுக்கு சென்று எங்களுக்கு ஏற்பட்ட அநீதியை முறையிட்டோம் அவர்கள் ஆலோசனை மட்டும் கூறினர். மாறாக பதில் நடவடிக்கை எடுக்கவோ, எங்களுக்கு ஆதாரவாக நிற்கவோ தயாரில்லை. உதவுவதாக கூறிய சிலரும் வார்த்தைகளோடு மட்டும் முடித்துக்கொண்டனர். அப்போது பெண்களுக்கென்று ஒரு அமைப்பை ஏன் உருவாக்க கூடாது என தோன்றியது. அதன் வேளிப்பாடே சகோதரிகள் அமைப்பு.
தொடக்கத்தில் 10 லிருந்து 12 வரை மட்டுமே உறுப்பினர்கள் இருந்தனர், பிறகு படிப்படியாக வளர்ந்து எல்லா பகுதிகளிலும் இப்போது உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். பல்வேறு பகுதியிலிருந்தும் சுமார் 1000 பெண்கள்  தங்களின் புகார்களை தெரிவிக்கின்றனர், அதை தீர்க்க முயற்சி செய்கின்றோம்.
உங்களுடைய கோரிக்கைகளுக்கு ஆண்கள் செவி சாய்க்கிறார்களா?
வேறு வாய்ப்பின்றி, செவி மடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை நாங்கள் உருவாகியுள்ளோம். ஒரு பெண் ஆணுக்கு சம்மாக அமர்ந்து முடிவெடுப்பதும், தீர்வுகள் கொடுப்பதும் ஆண்களால் ஏற்று கொள்ள முடிவதில்லை. இதுவரை நிலவியிருந்த நிலைக்கு நாங்கள் பெரும் சவாலாக இருப்பதால், அதிகப்படியான எதிர்ப்புகளை சந்திக்கின்றோம்.
எங்களை போன்ற பெண்களை அடித்து நொறுக்கி, ஒழித்து கட்ட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இன்றோ நிலைமை சற்று மாறி தான் விட்டது.
எவ்வாறு பெண்களின் பிரச்சினைகளை இவ்வளவு தீவிரமாக எடுத்து செல்ல முடிகிறது?  
இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முழுமையாக நம்மை ஈடுபடுத்தும் போது, நம்மிடையே உள்ள தயக்கங்களை அது உடைத்துவிடும். நான் அவர்களுடைய கண்களையும் அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர் என்பவதையும் மட்டுமே பார்ப்பேன்.
நாம் நம்முடைய உரிமைக்காக போராடுகிறோம் என்ற உணர்வு எங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தையும் சக்தியையும் கொடுக்கிறது.
13 வயதில் திருமண வாழ்க்கையிலிருந்து இந்நிலைக்கு வர பல போராட்டங்களை சந்தித்துள்ளீர்கள் அதைப்பற்றி…
imagesநான் என்னுடைய குழந்தை பருவத்தையும், இளம் பருவத்தையும் அனுபவத்ததில்லை. மாறாக என்னுடைய 20 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்தேன். என் வாழ்வானது குடும்ப வன்முறைகளாலும், என்னால் தாங்கமுடியாத வேதனைகளாலும் நிரம்பியது. என் பெற்றொர்கள் எனக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை.
20 வருடங்களுக்கு பிறகு, பல போராட்டங்களை கடந்து நான் என் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றேன். என்னுடைய சகோதரர் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார். என் தந்தையோ விவாகரத்திற்கு பதிலாக விசம் குடித்து நீ சாகலாம் என்று கூறினார். எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அநீதிகள் எல்லாம் தெரிந்த என்னுடைய தாய் கூட விவாகரத்து பெறுவதை விட சாவது மேல் என்று விரும்பினார். ஆனால் நான் அவர்களுக்கு எதிராக முடிவெடுத்தேன்.
எனக்கு பொருளாதார உதவியும் சொத்தும் இல்லை. என்னுடைய குழந்தைகளை அவரிடம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
பிறகு பெண்களுக்கான சிறிய நிறுவனத்தில் சேர்ந்தேன் அதில் சமாதானத்தையும் மற்றும் மன்னிப்பதையும் வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதை கற்று கொடுத்தனர். ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ஒரு பெண் எழுந்து என்னிடம் ”உங்களுடைய குழந்தையின் முகத்தில் அவளின் தந்தையே ஆசிட் விசீனால் அந்த இடத்தில் மன்னிப்பதை பற்றி யோசிப்பீர்களா?” என்றாள். நான் வாயடைத்து நின்றேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயாருக்காக உதவி புரிய தொடர்ந்தேன். ஆனால் இந்த கொடூரங்களை செய்தவர்களோ வெளியில் சுதந்திரமாக திரிகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள அமைப்புகள் இச்சம்பவங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாங்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினோம். எங்களுடைய தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக ஆசிட் வீச்சில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் தண்டித்தது. இந்நிகழ்வு எங்களுக்கு மேலும் மன உறுதியை தந்தது மற்ற பிரச்சினைகளையும் போராட்ட வடிவமாக கொண்டுச் செல்லவதற்கு இதுவே அடித்தளமாகியது.
உங்களுடைய அமைப்புக்கு வெளியிலிருந்து பொருளாதார உதவிகள் அல்லது சட்ட ஆதரவு கிடைத்துள்ளதா?
இதுவரையில் நாங்கள் யாரிடமிருந்தும் உதவிகள் பெறவில்லை. சிலர் தானாக முன்வந்து சட்ட ஆலோசனைகள் வழங்குகின்றனர். ஆனால் அவர்களும் முக்கியமான நேரத்தில் உதவுவதற்கு முன் வருவதில்லை. சில சட்ட ஆலோசகர்கள் அல்லது குழுக்களிடம் நாங்களாக உதவி கோரினாலோ உதவி செய்வதோடு, அதனால் கிடைக்கும் அனைத்து பலன்களையும் அவர்களே எடுத்துக்கொள்கின்றனர்.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
sisters-councilநான் வசிக்கும் பகுதிகளில் ஆணவக்கொலைகள், பெண்களை கடத்துவது, பாலியல் வன்முறைகள், நில தகராறு என நிறைய பிரச்சினைகள் உள்ளன. இரு குடும்பதினருக்கு இடையே பிரச்சினையை தீர்ப்பதற்கு தங்களின் பெண் குழந்தைகளை அடுத்தவர் வீட்டிற்க்கு அனுப்புகின்றனர் பெற்றோர்கள் இது போன்ற பிரச்சனைகளும் இங்கு உள்ளன. இத்தகைய பிரச்சினைகள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் எங்களுடைய கலாச்சார கருத்துக்களோடு ஊறிப்போன இச்சமூகம் பிரச்சினைகளின் தீவிரத்தை அதிக படுத்துகின்றன. நான் என்னுடைய முகத்தை காட்டி பேசுவது கூட எங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது.
ஆகையால் எங்கள் பகுதிகளில் பெண்கள் பேசுவது என்பதே பெரிய பிரச்சினை. அவ்வளவு எளிதாக தங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாது. தந்தைமார்கள் ஒரு விதத்தில் பயமின்றி தங்களின் பிரச்சினைகளொடு எங்களுடைய அமைப்பிற்கு வருகிறார்கள் என்றால், அவர்களுடைய வீட்டு பெண்கள் தங்களின் பிரச்சினைகளை வேறொரு பெண்ணிடம் தான் கூறுகிறார்கள் என்பதால் மட்டுமே.
வெளிநாட்டிலிருந்து பெற்ற இவ்விருது உங்களுடைய வேலைகளுக்கு பயன்படுமா?
தைரியமான பெண் என்ற பட்டத்தை பெற நான் இங்கு வந்திருக்கிறேன். எங்கள் ஊருக்கு திரும்பி போனால்தான் தெரியும் எவ்வளவு கொலைமிரட்டல்கள் எனக்காக காத்திருக்கின்றன என்று. இப்போதே எங்கள் பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து நான் பணம் பெறுவதாகவோ அல்லது ஏஜெண்டோ என்று நம்ப தொடங்கிவிட்டனர். இதுவரை ஒரு சிறு உதவிக்கூட எங்களுக்கு கிடைத்ததில்லை. எங்களுக்கான திட்டங்களை வகுக்க சில உதவிகளை நான் தொடர்ந்து கொருகிறேன். இதுவரை யாரும் செவிசாய்க்கவும் இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்க செய்வதற்கே நாங்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது.
இதுபோன்ற அங்கீகாரம் எங்களுக்கு பொருளாதார ரீதியில் எந்த விதத்திலும் பயன்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் மக்கள் இதன் மூலம் எங்களை கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் மலாலா சொந்த ஊரான மிங்கோராவை சேர்ந்தவர், 2012 தாலிபன்களின் தாக்குதலுக்கு பின்பு பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு அடைந்துள்ளதா?
Unknown
மாணவிகள்
பெண்களுக்கான கல்வி இங்கு தடைசெய்யப்படுவதில்லை. என் தாய், பாட்டி என அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களே. ஆனால் போர்க்காலங்களில் நாங்கள் எந்த குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதில்லை.
சில மாற்றங்கள் நடைப்பெற்றுள்ளன, அதை மறுக்க முடியாது. கல்வி முறையை மாற்றி அமைக்கவேண்டும் என்பதே என் கருத்து. நம்மை சுற்றி பல மாற்றங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறது அதற்கேற்றார் போல் நம் பகுதிகளிலும் மாற்றம் ஏற்படவேண்டும்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையில் எவ்வாறு இப்பகுதிகளில் உள்ள பெண்களின் நிலையை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்?
முதலில் சமூகத்தில் விழிப்புணர்வு செய்வது முக்கிய கடமையாகும். விழிப்புணர்வின் மூலம் நல்ல கல்வியை கொடுத்து மேம்பாடு அடையச்செய்வதே பிரதானமாகயுள்ளது.
உடனடியாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது, முயற்சி படிபடியாக கொண்டுவரும். பெரும்பாலான பெண்களுக்கு தன் உரிமைகளை பற்றி எந்த தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள். இதன் முலம் அவர்களுடைய உரிமைகளை பற்றி விழிப்புணர்வும் மேலும் அதற்காக போராட செய்வதும் எங்களின் தலையாய கடமையாகும்.
நன்றி: அல்ஜசீரா, தமிழாக்கம்: கலா.
Pakistan’s Sister’s Council: ‘Men have to listen to us’

கருத்துகள் இல்லை: