செவ்வாய், 6 மே, 2014

அ.தி.மு.க.,வினரை மிஞ்சிய அதிகாரிகள்

சென்னை: அ.தி.மு.க.,வினரை தொடர்ந்து, செய்தித் துறை அதிகாரிகளும் முதல்வரை, 'அம்மா' என, அழைக்க துவங்கி உள்ளனர்.தலைமைச் செயலக, செய்திப் பிரிவில் இருந்து வெளியிடப்படும் செய்திக் குறிப்பில், முதல்வர் பெயரை குறிப்பிடும்போது, 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா' என, குறிப்பிடுவர்.நேற்று, தமிழ் அறிஞர், கார்டுவெல் 200ம் ஆண்டு நிறைவு விழாவை, அரசு
விழாவாக கொண்டாட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது தொடர்பாக வெளியிடப்பட்ட, செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்ற வாசகம், மூன்று இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா என்ற பெயரே இடம்பெறவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள் போல், செய்திக்குறிப்பு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அதிகாரிகள் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.dinamalar.com முதல்வரே இந்த அரசை குறிப்பிடும்போது எனது அரசு நான் உத்தரவிட்டேன் என் ஆட்சி என நான் எனது என என்னமோ தமிழ்நாட்டையே இவர் விலைக்கு வாங்கிய கொடநாடு போல நினைத்து பேசுகிறார் ஃஅவரை மகிழ்விக்க மாவட்ட ஆட்சியர்களும் பிஆர்ஓக்களும் ஆயிஅதி்முக நிர்வாகிகளாக மாறி நாங்களும் உங்கள் ஆயுட்கால அடிமை கும்புடுகுருமட்டைகளில் ஒருவர்தான் என நிரூபித்துகொண்டு வருகிறார்கள்

கருத்துகள் இல்லை: