செவ்வாய், 6 மே, 2014

தேவ தாசியாக்கப்பட்ட பெண் : தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி அறவே ஒழிப்பேன் ! இன்னும் தேவதாசி முறை ஒழியவில்லை

துணிவுடன் திருமணம் செய்து கொண்ட பெண் சூளுரை
ஹூப்ளி.மே5- கர்நாடகா மாநிலத்தில் ஹூப்ளி வட்டத்தில் தேவ தாசியாக்கப்பட்ட பெண் கடும் எதிர்ப்புகளுக்கிடையே துணிச்சலாக திருமணம் செய்து கொண்ட தோடு, தேவதாசி முறையை எதிர்த் துப் போராடி அறவே ஒழிப்பேன் என்று சூளூ ரையை ஏற்றுள்ளார். எச்.சுமங்களா (வயது 35) எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய தாயாராலாயே வற்புறுத்தப் பட்டு தேவதாசியாக ஆக் கப்பட்டார்.
இருப்பினும் ஏழு ஆண்டுகளாக வேணு என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். வேணுவின் தொடர்பால் சுமங்களாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெண்களுக்கான மாநில அரசின் பாக்கிய லட்சுமி என்னும் உதவித் திட்டத்தில் தன்னுடைய மகளை சேர்க்கும்போது தந்தையின் பெயரைக் குறிப் பிடுமாறு கேட்டுள்ளனர்.
திருமணத்துக்கு முன் பாக வேணுவுடன் ஏற் பட்ட உறவில் குழந்தை கள் பிறந்துள்ளதால், குழந் தைகளின் எதிர்காலத்தை யும் கருத்தில்கொண்டு வேணுவைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். தற்போது, தன் தாயார் உட்பட பலரையும் எதிர்த்து, கடந்த 3-5-2014 அன்று பெல்லாரி மாவட்டத்தில் மாளவி கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் வேணு என்கிற எம்.வேணுகோ பால் என்பவருடன் திரு மணம் செய்து கொண்டு இல்லறத்தில் இணைந் துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தேவதாசிகளாக தள்ளப் பட்டு, வாழ்வில் பல கொடுமைகளை சந்திக்கும் பெண்களின் மறுவாழ்வுக் காக தேவதாசி மகிளேயரா விமோச்சனா கர்நாடகா என்கிற தொண்டு நிறுவ னம் செயல்பட்டுவரு கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் பி.பாலம்மாவின் உதவியுடன் சுமங்களாவின் திருமணம் ஹகாரிபொம் மனஹள்ளி பகுதியில் உள்ள அம்பேத்கர் பவனில் எளி மையாக நடைபெற்றது. வாழ்வில் பல தடங்களில் பயணிக்கும் ஏராளமான வர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
சுமங்களாவின் வீட் டுக்கு வேணு செல்லும் போது, கிராமத்தினர், உற வினர்கள் மற்றும் நண்பர் களின் எதிர்ப்பை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அப்போது, எங்களுடைய உறவு தற்போது அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. என் வீட்டாரும், அவளு டனே இருந்துகொள் என்று கூறி என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட் டார்கள். நானும் சுமங் களாவை ஆழமாக நேசிப் பதால், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது ஒப்புக்கொண்டேன் என்று விளக்கி உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, அரசு எங்களுக்கு எங்கள் கிராமத்திலேயே வாழ்வதற்கு சிறிய அளவில் இடம் கொடுத்தால் ஒரு குடிசை போட்டுக்கொண்டு என் மனைவி குழந்தை களோடு வாழ்வேன் என்று வேணு கூறுகிறார்.
தேவதாசி விமோச்சனா அமைப்பின் தலைவர் பி.பாலம்மா கூறும்போது, திருமணமுறையில் நம் பிக்கை ஏற்பட்டபின் சுமங் களாவின் ஒப்புதலின் பேரில், திருமணத்துக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தோம் என்றார்.
கர்நாடகா மாநிலத்தில் தேவதாசி முறை தடை செய்யப்பட்டிருந்தாலும், 1982ஆம் ஆண்டு தேவதாசி முறை தடை சட்டம் அம லில் இருந்தாலும், மாநி லத்தின் பல்வேறு பகுதி களிலும் பழைமைவாதி களால் தொடர்ந்து பின் பற்றப்பட்டுவருகிறது.
திருமணத்துக்குப்பின்னர் சுமங்களா கூறும்போது: நான் தேவதாசி என்னும் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. நடத் தைக்குறைவான தேவதாசி முறையை எதிர்த்துப் போரா டுவேன். நன்மதிப்பைக் கெடுக்கும் இந்த முறையை அறவே ஒழிப்பதற்கும், என்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் எதிர் காலத்தை பாதுகாக்கவும் என்னை ஒப்படைத்துக் கொள்வேன் என்று கூறினார்.
viduthalai.in 

கருத்துகள் இல்லை: