வியாழன், 8 மே, 2014

பாகிஸ்தான்:மனித உரிமையாளர் சிந்தனையாளர் வக்கீல் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற இடத்தை சேர்ந்தவர் ரஷீத் ரகுமான். இவர் வக்கீலாக பணியாற்றி வந்தார். வக்கீல் பணியுடன் கல்லூரியில் சொற்பொழிவாற்றும் செயலிலும் ஈடுபட்டு வந்தார். அவர் மதத்துக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் அவர் தனது அலுவலகத்தில் உதவியாளர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அவரை சரமாரியாக சுட்டனர். தடுக்க முயன்ற உதவியாளர்களையும் சுட்டார்கள்.
3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அதில் ரஷீத்ரகுமான் உயிரிழந்தார்.   

கருத்துகள் இல்லை: