செவ்வாய், 6 மே, 2014

சென்னை குண்டுவெடிப்பு சதிகாரனை அஸ்ஸாமில் பார்த்தோம்: குவிந்த போன் அழைப்புகள்

சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் தமிழக போலீசார் சதிகாரன் ஒருவனின் வீடியோவை வெளியிட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண் 9ல் உள்ள சிசிடிவி கேமராவில் அந்த நபரின் உருவம் பதிவானது. குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த நபர் கவுதாத்தி எக்ஸ்பிரஸின் எஸ் 3 பெட்டியில் இருந்து இறங்கி பதட்டத்துடன் அவசரமாக செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவில் உள்ள நபர் வழுக்கைத் தலையுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவனாக உள்ளான். அந்த வீடியோவை பார்த்த அஸ்ஸாமைச் சேர்ந்த பலரும் அவனை தங்கள் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் பார்த்துள்ளதாக போன் செய்து தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எஸ்.பி. விஜயகுமாரி தலைமையில் தனிப்படை போலீசார் கவுகாத்தி விரைந்தனர். அங்கு அவர்கள் சதிகாரன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: