வெள்ளி, 9 மே, 2014

144 பிரவீண்குமார் வாரணாசி தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நியமனம் !

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் பிரவீண் குமார்.
இவரது தலைமையில் தமிழ கத்தில் உள்ள 39 தொகுதிக்கும் அமைதியாக ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்காக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தார் இந்நிலையில் வாரணாசி தொகுதிக்கு சிறப்பு பார்வையாளராக பிரவீண் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். வாரணாசியில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களம் இறக்கப்பட் டுள்ளனர். இதனால் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், மூன்று கட்சிகளின் தொண்டர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் தலைவர்கள் பிரச்சாரத்தால் வாரணாசி ஸ்தம்பித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளை திறமையாக செய்வதற்கு சிரமமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரவீண்குமாரை தலைமை தேர்தல் ஆணையம் நியமித் துள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: