சனி, 13 ஜூலை, 2013

சமந்தா சித்தார்த் காதல் முறிந்து விட்டதா ?

‘நடிகையை மணக்க மாட்டேன்’ என்று சித்தார்த் திடீர் பல்டி அடித்திருப்பதால், சமந்தாவுடனான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாக  பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.சித்தார்த் ; சமந்தா ஆகிய இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலில் இருவீட்டார் முன்னிலையில் நடந்த சிறப்பு பூஜையில் சித்தார்த், சமந்தா கலந்துகொண்டனர். சமீபத்தில் திரைக்கு வந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சித்தார்த் நடித்தார். இதில் கெஸ்ட் ரோலில் சமந்தா நடித்திருந்தார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இதனால் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதில் ‘ஷாக்’ ஆன சமந்தா கடந்த வாரம் தனது திருமணம் பற்றி கருத்து தெரிவிக்கையில், ‘3 வருடங்களுக்குப் பிறகுதான் முடிவு செய்வேன். இப்போது நடிப்பில்தான் கவனம்’ என்று கூறி இருந்தார். சித்தார்த் & சமந்தா திருமணம் செய்ய உள்ளதாக பலமுறை கிசுகிசுக்கள் வந்தபோதும் அதை இருவருமே மறுக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சித்தார்த் கூறும்போது, ‘திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் நடிகையை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறினார். இதையடுத்து சித்தார்த் - சமந்தா காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.

கருத்துகள் இல்லை: