திங்கள், 8 ஜூலை, 2013

இளவரசனின் தற்கொலை கடிதத்தை திருடியவர்கள் கைது? கலெக்டர் அறிவிப்பு ! நம்புறோம் நம்புறோம் இனி சொல்லப்போவதையும் நம்புவோம்

சென்னை: தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் தெளிவாகியுள்ளது என்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அஸ்ரா கார்க்கும், டி.எஸ்.பியும் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முன்பு இளவரசன் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், அதை சிலர் திருடி வைத்திருந்ததாகவும், இதுதொடர்பாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎஸ்பி சம்பத் தெரிவித்துள்ளார். இளவரசன் தற்கொலை- கலெக்டர் அறிவிப்பு; தற்கொலை கடிதத்தை திருடியதாக 4 பேர் கைதாம்! இளவரசன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பலரும் நம்பி வரும் நிலையில், ஆட்சித் தலைவர் மற்றும் டிஎஸ்பியின் இந்த திடீர் தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இளவரசனின் கடிதத்தை திருடியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருடியவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ஆட்சித் தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் இளவரசன் கூறியுள்ளார் என்றார். டிஎஸ்பி சம்பத் கூறுகையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இளவரசன். இதுதொடர்பாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தன் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியுள்ளார். இளவரசன் இறப்பதற்கு முன்பாக அவர் பையில் வைத்திருந்த கடித்தத்தை மர்ம நபர்கள் சிலர் திருடியுள்ளனர். அது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள கடிதம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: