செவ்வாய், 9 ஜூலை, 2013

புத்தகயாவில் குண்டு வைத்த தீவிரவாதி கைது?

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது புத்தகயா.
இங்கு உலக புகழ் பெற்ற மகாபோதி புத்தர் கோயில் உள்ளது. இங்குள்ள போதி மரத் துக்கு அடியில்தான் புத் தர் ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான புத்த மதத்தின ரின் புனித இடமாக இது கருதப்படுகிறது. இந்த கோயிலில் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 5.58 மணிக்குள் அரை மணி நேரத்துக்குள்ளாக அடுத் தடுத்து 9 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. முதலில் மகா போதி மரத்துக்கு அருகில் குண்டு வெடித்தது. அங்கி ருந்த மேஜை தூக்கி வீசப் பட்டு நொறுங்கியது. அதன்பின், கோயில் வளாகத்துக்குள் மேலும் 3 குண்டுகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து கர்ம பா மடம் பகுதியில் 3 குண்டுகள் வெடித்தன. மடத்தின் அருகில் உள்ள 80 அடி உயர புத்தர் சிலை அருகே ஒரு குண்டும், கோயில் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு குண்டும் வெடித்து சித றின. குண்டு வெடிப்பில் மியான்மா மற்றும் திபெத் நாட்டைச் சேர்ந்த 2 புத்த துறவிகள் படுகாயம் அடைந்தனர்.  அதிகாலை நேரம் என்பதால் ஆட்கள் நட மாட்டம் குறைவாக இருந்தது. இதனால் உயிரி ழப்பு இல்லை. சம்பவத் தை தொடர்ந்து வெடி குண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக் கப்பட்டனர். காவல்துறை யினர் நடத்திய சோத னையில் கோயில் அருகே வெடிக்காமல் கிடந்த 2 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட் டன.

பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ளூர் காவல் துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சந்தேகப்படும்படி ஒரு நபர் பிடிபட்டார். அந்த நபரிடம் இருந்து ஏராளமான ஆவணங்களும் வரைபடங்களும் சிக்கின.
அவர் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பீகார் மாநில காவல்துறையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மேற்கு வங்கமாநிலம் நடியா மாவட்டத்தில் அன்வர்உசேன் என்பவனை நேற்று மாலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவனிடம் ரூ. 2 லட்சம் கள்ள நோட் டுக்கள் இருந்தன.
அவன் புத்தர் கோவில் குண்டு வெடிப்புக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புக்கு இவன்தான் வெடி பொருட்கள் விநியோகம் செய்ததாக கூறப்பட்டது. அவனையும்  காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: