புதன், 10 ஜூலை, 2013

மதிமுகவின் அலுவலகம் காக்க நடிகர் திலகம் வைகோ வேண்டுகோள் ! உப்பு தின்னவன் தண்ணி ...?

கட்சி அலுவலகமான, தாயகத்தை நடத்த, நிதி வழங்குங்கள்' என, யாசகம்
கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, ம.தி.மு.க.,வினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.குற்றச்சாட்டு: பேச்சாற்றலால், 20 ஆண்டு பார்லிமென்டில், தி.மு.க.,வின் முகமாக பிரதிபலித்து, தமிழகத்தில், தி.மு.க.,வின் அடுத்த தலைவர் என்ற இடத்துக்கு முன்னேறி, விடுதலை புலிகள் மூலம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அகற்றிவிட்டு, தி.மு.க.,வை கைப்பற்ற திட்டமிட்டவர் என்ற குற்றச்சாட்டில், 1993, அக்., 3ல், தி.மு.க.,வில் இருந்து, வெளியேறியவர் வைகோ. "நாங்கள் தான் உண்மையான தி.மு.க.,' என, ஆதரவு திரட்டி, 1994 மே, 6ம் தேதி, ம.தி.மு.க.,வை, வைகோ துவக்கினார்.கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, அ.தி.மு.க., கூட்டணியில், ஜெயலலிதாவுக்கு, நம்பிக்கையானவராக இருந்தார். தமிழ், ஈழத் தமிழர், தமிழர் விழா என, பல பெயர்களில், நடராஜனுடன், நெருக்கமாக, வலம் வந்ததால், "நடராஜனுடன் சேர்ந்து, அ.தி.மு.க.,வை, கைப்பற்றி விடுவார்' என, அ.தி.மு.க., தலைமையிடம், போட்ட தூபத்தால், சட்டசபை தேர்தல் கூட்டணி அமைத்த போது, சந்திக்க நேரம் கொடுக்காமல், கூட்டணியில் இருந்து, தூக்கி வீசப்பட்டார்.  ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசியவருக்கா இந்த நிலைமை ? வடிவேல் படத்துல நடிக்காம இருக்கிறாரு அந்த இடத்துல வைகோ இருந்து சினிமால நடிச்சா நிறைய பணம் வருமே ?
  மிச்சம் கொஞ்சம்: வைகோவுடன் இருந்த, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், பொன் முத்து ராமலிங்கம், செல்வராஜ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் வெளியேறினர். தற்போது, விரல்விட்டு எண்ணும் சிலரே, உடன் உள்ளனர். தேர்தல் நேரத்தில் தான், அரசியல் கட்சிகள், நிதி திரட்டுவது வழக்கம். ஆனால், சமீபத்தில், வைகோ என, கையெழுத்திட்டு, அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மிக உருக்கமாக, "வர இருக்கும், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கும், கழகத்தின் அன்றாட பணிகளுக்கும், தலைமை கழக அலுவலகமாம் தாயகத்தை இயக்குவதற்கும், பணம் தேவைப்படுகிறது. தங்களால் இயன்ற நிதியை, கனிவோடு தாரீர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ம.தி.மு.க.,வினரை, தள்ளாடச் செய்துள்ளது. நமது நிருபர் -dinamalar.com/

கருத்துகள் இல்லை: