புதன், 10 ஜூலை, 2013

உத்தரகாண்ட்: கால்கள் உடைந்து தனிமையில் இருந்த சிறுமி கண்டுபிடிப்பு

உத்தரகாண்ட் வெள்ளத்தில் 3 வயது குழந்தை ஒன்று தனிமையாக்கப்பட்டு 2
கால்களும் உடைந்த நிலையில் கோதியாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 2 கால்களும் உடைந்து, மாவு கட்டு போடப்பட்டு, அசைக்க முடியாத நிலையில் ஒரு கட்டிலில் அமர்ந்து இருக்கிறது.  தற்போது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமி ரிஷிகேஷ் மற்றும் தேவ்பராயாக் இடையே வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது சிறுமி அவளது தாத்தா மற்றும் பாட்டியிடம் இருந்து பிரிந்துள்ளார். பின்னர் அங்கு சிக்கி தவித்த சிறுமி இரண்டு கால்களும் உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பாக்வான் கிராமம் என்றும் சிறுமியின் பெயர் ஜோதி என்றும் தெரியவந்துள்ளது. சிறுமி தனது பாட்டி மற்றும் தாத்தாவை வெள்ளத்தில் இழந்துள்ளார்maalaimalar.com

கருத்துகள் இல்லை: