அதிமுக
அரசின் சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில்
வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரச் செயலாளர் பாரதி
முருகன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள்
எம்பி சீனிவாசன், வேடச்சந்தூர் எம்எல்ஏ பழனிச்சாமி, பழனி எம்எல்ஏ
வேணுகோபால் உள்பட முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
>கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி கலந்துகொண்டு பேசியதாவது, இரண்டு
வருடத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறேன். 27 வருடங்களுக்கு
பிறகு மண்டேலா எப்படி மக்களைப் பார்த்து சந்தோஷப்பட்டாரோ அந்த அளவுக்கு
இப்போது சந்தோஷம் அடைகிறேன். அதற்காக அம்மாவுக்கு நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.நான் என்ன தப்பு செய்தேன். 35 வருடமாக
கட்சிக்காக உழைத்து பட்டிதொட்டிகளெல்லாம் போய் கட்சியை வளர்த்து வந்தேன்.
அதற்காக எனக்கு 6 முறை எம்எல்ஏ சீட் கொடுத்தார்கள். அதுவும் ஜெயக்கிற
குதிரை, உழைக்கிற குதிரை என்று நினைத்துத்தான் கொடுத்தார்கள். அம்மாவைப்பற்றி பலமுறை தவறாக பேசியிருக்கிறேன். அப்படியிருந்தும், நான் போய் சேர்ந்தபோது, அன்பாக பேசி பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டார். ஏற்றுக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றி வா லட்சக்கணக்கான கட்சியினர் இருக்கின்றனர் என்றார். இனி அம்மா காலம்தான். எம்பி, எம்எல்ஏ என இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிவாகை சூடப்போகிறது. இவ்வாறு பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக