புதன், 10 ஜூலை, 2013

ஸ்ரீபிரியா மீண்டும் இயக்குனராகிறார்! மாலினி 22 பாளையங்கோட்டை

தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. தற்போது
தமிழில் இரண்டு தொலைக்காட்சி தொடர்களை இயக்கு வருகிறார். முதல் முறையாக இவர் கணவர் ராஜ்குமார் தயாரிக்கும் படத்தை இவர் இயக்குகிறார். மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழில் 'மாலினி 22 பாளையங்கோட்டை' என்று பெயரிட்டுள்ளர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன், புதுமுக நாயகனாக கிரிஷ் இணைந்து நடிக்க மற்றும் கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தபடத்தின் படப்பிடிப்பு வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தைப் பற்றி ஸ்ரீபிரியா கூறும்போது, ''இந்தப் படம் மலையாளத்தில் பார்த்தபோது என்னை மிகவும் கவர்ந்தது. இது இன்றைய காலக்கட்டத்தில் தினமும் நாம் பத்திரிகையில் சந்திக்கும் செய்திகளாக உள்ளது. இப்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படும். அதனால் இது எல்லா மொழிகளிலும் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் கணவர் தயாரிக்க நான் இந்த படத்தை இயக்குகிறேன்'' என்றார்

கருத்துகள் இல்லை: