செவ்வாய், 9 ஜூலை, 2013

தமன்னா: ஒரு கோடிக்கு நயா பைசா குறைந்தாலும் நடிக்க மாட்டேன்!

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த தமன்னாவுக்கு அப்போது கொடுக்கப்பட்டு
வந்த சம்பளம் 30 லட்சம்தானாம். சில படங்களில் அதைவிட குறைவாகக்கூட அவர் வாங்கியதுண்டாம். ஆனால், தமிழுக்கு வந்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தபிறகு படத்துக்குப்படம் 5 முதல் 10 லட்சம் வரை படிப்படியாக தனது சம்பளத்தை உயர்த்தினாராம்.அப்போது அவருக்கு மார்க்கெட்டும் இருந்ததால் அதை எந்த படாதிபதியும் பொருட்படுத்தவில்லை. கேட்ட சம்பளத்தை கொடுத்தனர். இப்படியாக ஒருவழியாக ஒரு கோடியை தொட்டு நின்றார் தமன்னா. ஆனால் அந்த நேரம் பார்த்து வேங்கை படம் அவரை சறுக்கி விழ வைத்து விட்டது. இருப்பினும் பின்னர் பாலிவுட்டுக்கு சென்று ஹிம்மத்வாலாவில் நடித்த தமன்னா, அதையடுத்து தெலுங்குக்கு வந்தபோதும் அந்த பழைய ஒரு கோடி சம்பளத்தில் இருந்து குறையவில்லையாம். கோடிக்கு நயா பைசா குறைந்தாலும் நடிக்க மாட்டேன் என்றும் தடாலடியாக பேசியிருக்கிறார்.


அதனால், முன்பு மார்க்கெட் கெட்டியாக இருந்ததால் ஒரு கோடி தந்தோம். இப்போது மார்க்கெட் இல்லாதபோதும் அதே தொகையை கேட்டால் எப்படி என்று தமன்னாவிடம் படாதிபதிகள் வாக்குவாதம் செய்கிறார்களாம். ஆனால், தமன்னாவோ, இதுதான் எனது ரேட், முடிந்தால் வெட்டுங்கள். இல்லையேல் ஏறக்கட்டுங்கள் என்பதுபோல் தில்லாக பேசுகிறாராம். இதனால், தமன்னாவை புக் பண்ணிய ஒரு படாதிபதி அவருக்குப்பதிலாக தற்போது அங்கு மார்க்கெட்டில் இருக்கும் சமந்தாவை புக் பண்ணி தமன்னாவை நோஸ்கட் செய்து விட்டாராம். dinamalar.com

கருத்துகள் இல்லை: