செவ்வாய், 10 ஏப்ரல், 2012

Sasikala:பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், கூடுதல் ஆவணம் வேண்டும்

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கூடுதல் ஆவணங்கள் கேட்டு சசிகலா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நீதிபதி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடந்து வருகிறது.
சசிகலாவிடம் வாக்குமூலம் வாங்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை அரசு தரப்பில் கொடுக்கக் கோரி சசிகலா கோரிக்கை விடுத்தார். அதை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து அவர் இது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

சொத்து குவிப்பு வழக்கில் 400க்கும் மேற்பட்ட குறியிடப்படாத ஆவணங்கள் அரசு வழங்காமல் இருப்பதால் குற்றவியல் நடைமுறை சட்டம் 313ன் கீழ் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தவிக்கிறேன். எனவே, கூடுதல் ஆவணங்களை வழங்குமாறு அரசு தரப்பிற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: