புதன், 11 ஏப்ரல், 2012

மனம் கொத்தி பறவை முன்னோட்டம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்டர் எழில் இயக்கும் புதிய படம் மனம் கொத்தி பறவை. இப்படத்தின் டைரக்டராக மற்றும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதரித்து இருக்கிறார் எழில். மனம் கொத்தி பறவை படத்தின் நாயகனாக சின்னத்திரை புகழ் சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆத்மியா அறிமுகமாகிறார்.

படம் குறித்து டைரக்டர் எழில் கூறும்போது, இது ஒரு காதல் கதை. கதாநாயகி உட்பட நிறைய புதுமுகங்களை இப்டத்தில் அறிமுகம் செய்கிறேன். கும்பகோணத்தில் இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது என்றார்.

கருத்துகள் இல்லை: