புதன், 10 ஆகஸ்ட், 2011

கோட்டாபய ராஜபக்ஷ்: மக்களையும் சொத்துக்களையும் பிரிட்டிஷ் அரசு பாதுகாக்க வேண்டும்

லண்டன் மக்களையும் சொத்துக்களையும் பிரிட்டிஷ் அரசு பாதுகாக்க வேண்டும்
லண்டன் கலவரங்கள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்களையும் அவர்களுடைய சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் வழங்கிய பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், லண்டனில் உள்ள இலங்கையர்கள் இக்கலவரங்களில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்களா என்பது தொடர்பில் மிகவும் அவதானமாக கண்காணித்து வருவதாக லண்டனில் உள்ள இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை பிரித்தானியப் பொலிஸார் சுட்டதையடுத்து அங்கு கலவரம் மூண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: