ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

புலிகளின் 3 உயர் உறுப்பினர்களின் மனு தள்ளுபடி

புலிகளின் உயர் உறுப்பினர்களின் மனு தள்ளுபடி 
யுத்தகாலத்தில் கொழுப்பில் தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டனர் என குற்றப் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்த வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த உயர்நிலை உறுப்பினர் மூவரின் அடிப்படை உரிமை மீறல் மனுவினை மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனுவில் அநீதியாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அத்தோடு அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் மனு நேற்று பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சந்தேக நபர்கள் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேல்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து மேல் நீதிமன்றம் மனுவினை நிராகரித்தது.

கருத்துகள் இல்லை: