ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தில்சானை கொன்ற ராணுவ அதிகாரிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு!

சென்னை தீவுத்திடல் அருகே கொடிமர சாலையில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் விளையாடிய சிறுவன் தில்சான் (13) கடந்த மாதம் 3 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டான். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்ராஜிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மீண்டும் வருகிற 8 ம் திகதி (திங்கள்) ஜாமீன் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 104 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
974 சாட்சியங்கள் மற்றும் முக்கிய தடயங்கள், தடவியல் அறிக்கை ஆகியவை குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 8 ம் திகதி இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் ராம்ராஜுக்கு 28 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: