திங்கள், 6 ஜூன், 2011

Jaffna இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன் முற்றுகை போராட்டம்

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன் முற்றுகை போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

 வடகடலில் அத்துமீறிய இந்திய மினவர்களது மீன்பிடியைத் தடுப்பதற்கு இந்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி வடமாகாண கடற்றொழில் சங்கங்களினால் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தள்ளார்.

"எமது கடல் வளங்களை இந்திய மினவர்கள் அள்ளிச் செல்ல நாம் வீடுகளில் பட்டினியாய் இருக்கிறோம்" மீனவ சமூதாயத்தின் வற்றாத சொத்தான எமது கடல் வளம் அழிக்கப்படுவதையும் எல்லை மீறிய இந்தி மீனவரது மீன்பிடியை உடனடியாக நிறுத்தப்பட்டு எம்மை சுதந்திரமாக கடற்றொழில் செய்ய அனுமதிக்குமாறும் இந்நிய, இலங்கை அரசுகளைக் கண்டித்து எமது போராட்டத்தை நடத்தவுள்தாக தெரிவித்தள்ள அவர்,

எமது இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு திர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் தாம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் சமாசத் தலைவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை: