புதன், 28 செப்டம்பர், 2022

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று ஒரு நாள் தமிழகம் கூடலூர் வருகை

 ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று ஒரு  நாள் தமிழகம் கூடலூர் வருகை
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின்  ஒரு பகுதியாக செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் ஆமைகுளம் அருகே ராகுல் காந்தி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பின்னர் மாலை கூடலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் நீலகிரி மற்றும் கோவை, சேலம், ஈரோடு போன்ற சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் தொடங்கினார்.
செப்டம்பர் 30-ம் தேதி இந்த யாத்திரை கர்நாடக மாநிலம் மைசூர் சென்றடையும்

கருத்துகள் இல்லை: