புதன், 6 நவம்பர், 2019

திருக்குறள் முதல் மொழி பெயர்ப்பு 1730ம் ஆண்டு... வெளியிட்டவர் பாதிரியார் கோன்ஸ்டண்டின் பெஸ்கி (வீரமாமுனிவர்)

Subashini.thf : திருக்குறளின் மீது தீராத பற்று கொண்டு அதனை மொழிபெயர்ப்பு செய்து ஐரோப்பாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை முதலில் பாதிரியார் கோன்ஸ்டண்டின் பெஸ்கி (வீரமாமுனிவர்) என்ற இத்தாலிய தமிழ் அறிஞரையே சாரும். இவரது முதல் திருக்குறளுக்கான மொழி பெயர்ப்பு நூல் 1730ம் ஆண்டு வெளிவந்தது. இதற்குப் பிறகு படிப்படியாகப் பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என சில மொழிபெயர்ப்புகள் வெளிவரத்தொடங்கின. இத்தகைய முயற்சிகளின் வரிசையில் F.W.எல்லிஸ் அவர்களது பங்களிப்பு சிறப்பிடம் பெறுவது. அவர் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கி 1810ம் ஆண்டில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயங்களை 1810ம் ஆண்டில் வெளியிடுகின்றார். F.W.எல்லிசின் இந்த மொழிபெயர்ப்பு நூலின் 2 பக்கங்கள் இணைத்துள்ளேன். இதில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவத்தையும் வாசிப்போர் கவனத்தில் கொள்க!
-சுபா

கருத்துகள் இல்லை: