வியாழன், 5 செப்டம்பர், 2019

இளவரசி டயானா விபத்தின்போது இறக்கவில்லை ..Oh my god என்றார் .. ஆபத்து கட்டத்தை தாண்டியிருந்தார் .. அம்புலன்ஸ் வீரர் வாக்குமூலம்! வீடியோ


lankapuri.com : இளவரசி டயானாவின் இறுதி வார்த்தைகள் 22 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உயிரைக் காப்பாற்ற முயன்ற ஒரு தீயணைப்பு வீரரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த சோகமான நாளில் சம்பவயிடத்திற்கு முதலில் சென்றவர்களில் ஒருவர் பாரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon.
சமீபத்தில் நேர்காணால் ஒன்றில் பேசிய Xavier Gourmelon, 1997 ஆம் ஆண்டில் பாரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவயிடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர்.
கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான சாலை விபத்து போலவே நாங்கள் அதைக் கையாண்டோம். என்னைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண போக்குவரத்து விபத்து, இது வேகம் மற்றும் குடிபோதையில் ஓட்டுநர் என வழக்கமான காரணங்களால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிந்தது.
இளவரசியுடைய வலது தோள்பட்டையில் லேசான காயம் இருப்பதை என்னால் காண முடிந்தது, ஆனால் அது தவிர, குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை. அவர் மீது ரத்தம் எதுவும் இல்லை.

நான் அவர் கையைப் பிடித்து அமைதியாக இருக்கும்படி சொன்னேன், நான் உதவி செய்ய இருக்கிறேன் என்றும் சொன்னேன், அவருக்கு உறுதியளித்தேன். இளவரசி டயானா, ‘என் கடவுளே, என்ன நடந்தது? என கேட்டார்.
நான் அவர் இதயத்தை மசாஜ் செய்தேன், சில நொடிகள் கழித்து இளவரசி மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தார். இது நிச்சயமாக ஒரு நிவாரணமாக இருந்தது, ஏனெனில், முதலில், நீங்கள் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள், அதைத்தான் நான் செய்தேன் என்று நினைத்தேன்.
உண்மையைச் சொல்வதென்றால் அவர் வாழ்வார் என்று நினைத்தேன். ஆம்புலன்சில் இருந்தபோது எனக்குத் தெரிந்தவரை உயிருடன் இருந்தார், அவர் வாழ்வார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று தகவல் வந்தது. அது மிகவும் வருத்தமாக இருந்தது.
கடுமையான உள் காயங்கள் இருந்தன என்பது இப்போது எனக்குத் தெரியும், ஆனால் முழு சம்பவமும் இன்னும் என் மனதில் இருக்கிறது. மேலும் அந்த இரவின் நினைவு எப்போதும் என்னுடன் இருக்கும். அது இளவரசி டயானா என்று எனக்கு அப்போது தெரியாது. ஆம்புலன்சில் வைக்கப்பட்டபோது தான் துணை மருத்துவர்களில் ஒருவர் அது இளவரசி என்று என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: