வியாழன், 6 ஜூன், 2019

நீட் தேர்வு தற்கொலைகள்: மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஷியா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

tamil.samayam.com : : மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஷியா தற்கொலை! நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று மதியம் 1.35 மணியளவில் வெளியாகின. நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ,மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. தமிழகத்தில் மாநில அளவில் ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால், திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ (17) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷியா (17) மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களுடைய தற்கொலை பலரையும் சோகம் அடையச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: