சனி, 8 ஜூன், 2019

போங்கடா நீங்களும் உங்கள் ஹிந்தியும்... பசியில்லாமல் வாழ வைங்கடா முதலில்! தமிழகம் வரும் வட இந்திய...

தமிழ் மாறன் தமிழ் மாறன்  : சற்று முன் சில டாக்குமெண்ட் காப்பிகளை பிரதி எடுக்க கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு வடநாட்டு இளைஞர் ஒருவரும் ஏதோ பிரதி எடுக்க வந்திருந்தார்.
அவரிடம், “இங்கிலீஸ் மாலும்..” என்றேன்.
'தெரியாது!' என தலையாட்டினார்.
“தமிழ் மாலும்..” என்றேன். அதற்கும் 'தெரியாது' என தலையாட்டினார்.
பக்கத்தில் இருந்த, இந்தி தெரிந்த ஒருவர் மூலம் அந்த இளைஞரிடம் பேசினேன்.
“எந்த மாநிலம்..?”
”உத்திரப்பிரதேஷ்”
“என்ன படிச்சிருக்கே..?”
“பத்தாம் வகுப்பு”
”இங்கே என்ன வேலை..?”
”பெயிண்ட்டர்!”
“இந்தி படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றாங்களே..! உங்க உ.பி.யில வேலை கிடைக்கலையா.. உனக்கு ?”
”அங்கே ஒண்ணுமே இல்லே..! யோகி னு ஒரு சாமியார் ஆள் முதலமைச்சராகி
படு கேவலமான முறையில் ஆட்சி நடத்திறான். அவன் ஆட்சி இந்த பீரியடும் தொடர்ந்திதுனா உத்திரப் பிரதேசமே சுடுகாடாகிடும். முழுக்க முழுக்க ராமரின் பெயரால் அயோக்கியத்தனம் பண்ணும் பக்கா கிரிமினல் அவன். எங்க ஊர் ஏழைப் பெண்களின் கற்புக்கும் குடும்ப வாழ்விற்க்கும் உத்தரவாதமே கிடையாது. தமிழர்கள் தெய்வங்கள்.
உண்மையில் ராமராஜ்யம் என்பதை
நான் இங்கேதான் காண்கிறேன்.

என் மனைவியும் எனது இரண்டு பிள்ளைகளும் சத்தியமாக பசியில்லாமல் நாளைக் கழிக்கும்
அந்த சொர்க்க தினங்கள் எனக்கு
இங்கேதான் கிடைத்தது. விரைவில் உங்கள் மொழியை எப்படியாவது கற்றுக் கொண்டு நான் ஒரு தமிழனாக மாறவே விரும்புகிறேன். தமிழ்நாட்லதான் நிறைய பில்டிங் கட்றாங்க.. வேலை நிறைய கிடைக்குது எங்க பசியெல்லாம் பஞ்சாப் பறக்குது.. !” மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனான்.
"அடப் போங்கடா..!!. நீங்களும்.. உங்கள் ஹிந்தியும்..!! மனிதனை பசியில்லாமல் வாழ வைங்கடா முதலில்!!!! அப்புறம் பாத்துக்கலாம்.. ஆட்சி, அதிகாரம், மொழி, இனம், கடவுள் எல்லாம்!!!!
தமிழ் மாறன் தமிழ் மாறன்

கருத்துகள் இல்லை: