சனி, 2 மார்ச், 2019

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த தி.மு.க.. தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு: கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த தி.மு.க!news18: தே.மு.தி.கவுடன் அ.தி.மு.க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு: கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த தி.மு.க! அறிவாலயம்  ST தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்ய ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த நாளை வருமாறு தி.மு.க சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு நாள் நெருங்கிவரும் வேளையில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தே.மு.தி.கவுடன் அ.தி.மு.க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 அதைத்தவிர முக்கிய கட்சிகளான ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்ஸிஸ்ட் மற்றும் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடையாமல் இருந்துவருகிறது. தற்போது, அந்தக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை வருமாறு தி.மு.க சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை தி.மு.க கூட்டணியில் நாளையுடன் தொகுதிப் பங்கீடு நிறைவு செய்யப்படும் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை: