வெள்ளி, 1 மார்ச், 2019

அதிமுக கூட்டணயில் தேமுதிக : 4 + 1 தொகுதி உடன்பாடு எட்டியது


500 கோடி 5 நாடாளுமன்ற தொகுதிகள்  .. வெப்துனியா :மாலைமலர் : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஆளும், எதிர் கட்சிகள் தேமுதிகவை தம் கூட்டணிக்குள் இழுக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால்  விட்டுக்கொடுக்காத விஜயகாந்த் இன்னும் தொகுதி உடன்பாட்டில் இழுபறியாகவே இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்டாலின் இதற்குமேல் பேரம் நடத்த முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து அதிமுக தரப்பில் 5 தொகுதிகள் கொடுத்து தங்கள் மெகா கூட்டணிக்கு மற்றொரு பலமாக தேமுதிகவை இணைக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தேமுதிக - அதிமுக இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.


அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு ஐந்து தொகுதிகளும் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு கூடுதலாக ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக தேமுதிகவுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பாமாவுக்கு கொடுத்ததுபோல் தங்களுக்கும் வழங்க வேண்டுமென அதிமுகவுடன் தேமுதிக கோரிக்கை வைத்தது. இதனை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது

இதனையடுத்து 4 தொகுதிகள் மற்றும் அத்துடன் ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் நிதி வேண்டும் என பேரம் பேசப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டாத நிலையில் தேமுதிக சற்று தயக்கம் காட்டியது.
அதன்பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்றார். இதனால் தேமுதிக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் இருக்கிறது.
இந்நிலையில் மார்ச் 1- ஆம் தேதிக்குள் முடிவை அறிவிக்குமாறு திமுக தேமுதிகவுக்கு கெடு விதித்துள்ளது.
இதேபோல் அதிமுகவும் மார்ச் 5ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே இன்றைக்குள் கூட்டணியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருந்தது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து ஆலோசிக்க தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் தருவதாக ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
மேலும் அடுத்து வரவிருக்கிற உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிகவுக்கு 20% இடங்களை ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகின்றன<

கருத்துகள் இல்லை: