வெள்ளி, 26 அக்டோபர், 2018

உயர்சாதி பனியாவும் பார்ப்பனரும் சேர்ந்து கட்டிய மாயக்கோட்டை தான் 2ஜி ஊழல் குற்றச்சாட்டும் வழக்கும்.

Krishnavel T S  : ஸ்பெக்ட்ரம் நாயகன்
இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்து ராசா அவர்களின் பிறந்த நாள். அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்கள் தொண்டு செய்ய வாழ்த்துகள்.
நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் இன்றும் சிலர் திமுக வழக்கம் போல விஞ்ஞான முறையில் ஊழல் செய்து தப்பித்து விட்டார்கள் என்று உளறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
விஞ்ஞான முறையில் இருப்பதை இருக்கிறது இல்லாதததை இல்லை என்று தான் நிருப்பிக்கமுடியும், அது எப்படி நடந்த குற்றத்தை நடக்கவில்லை என்று நிருபிக்க முடியும் என்று, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கை எதோ அவரது குடும்பத்தில் சொத்து தகராறு என்பது போல அந்த வழக்கை ஜெயலலிதா சொத்து வழக்கு என்று கடைசிவரை சொல்லிவந்த திருட்டு ஊடகங்கள் தான் விளக்க வேண்டும்
2ஜி ஸ்பெக்ட்ரம் என்னதான் நடந்தது
ராசாவின் காலத்துக்கு முன் அரசாங்கம் ஏதாவது ஒரு புதிய தொழில் நுட்பத்துக்கு லைசன்ஸ் வழங்குவது எப்படி என்றால், முதலில் முன் அனுபவம் உள்ள நிறுவனங்களை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க சொல்வார்கள், உடனே டாட்டா அம்பானி போன்ற பழம் பெருச்சாளிகள் விண்ணபிப்பார்கள்,

அவர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்படும், அந்த உத்தரவை காட்டி அவர்கள் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களோடு கூட்டு வைப்பார்கள்,
அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டு பணத்தை அந்த புதிய கூட்டு நிறுவனத்துக்கு தந்த பிறகு டாட்டா அம்பானி போன்றவர்கள் அதன் பிறகு தான் லைசன்ஸ் பணத்தையே கட்டுவார்கள்
ராசா செய்தது ஒரு சிறிய மாற்றம் மட்டுமே, லைசன்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்யுங்கள் ஆனால் உங்கள் விண்ணப்பத்தோடு லைசன்ஸ் பணமும் சேர்த்து கட்ட வேண்டும், முழு லைசன்ஸ் தொகையோடு யார் யாரெல்லாம் விண்ணப்பித்தார்களோ அவர்களில் முதலில் வந்தவருக்கு முதலில் என்ற முறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும் என்று விதியை மாற்றினார்.
நிறைய புதிய நிறுவனங்கள் வந்தார்கள் விண்ணப்பித்தார்கள் லைசன்ஸ் பெற்றார்கள்,
பழம் பெருச்சாளிகள் இத்தனை காலம் எக்கு கோட்டை போல நாங்கள் வைத்திருந்த கார்பொரேட் உலகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட நபர் அதிலும் தென்னாட்டை சேர்ந்த ஒருத்தன் (வடநாட்டில் மதராசி என்றால் சற்று ஏளன பார்வை இன்றும் உண்டு) வந்து உலுக்கி பார்ப்பதா? என்ற எரிச்சலில் கோபத்தில் உயர்சாதி பனியாவும் பார்ப்பனரும் சேர்ந்து கட்டிய மாயக்கோட்டை தான் 2ஜி ஊழல் குற்றச்சாட்டும் வழக்கும்.
அது எப்படி மொத்த இந்தியாவும் சேர்ந்து ஒரு மனிதரை குற்றவாளியாக பார்க்க வைக்க முடியுமா என்று நீங்கள் கேட்கக் கூடும்.
வடஇந்திய ஊடகம் குறித்த உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு செய்தி சொல்கிறேன், மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிரணாய் ராய் (CEO of NDTV) எழுத்தாளர் அருந்ததி ராயின் சித்தப்பா
பிரணாய் ராய் மணந்துகொண்டது ராதிகா ராய் 1987ல் தில்லி தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குனர் இவர்
ராதிகா ராய் CPI(M)ஐ சார்ந்த பிரிந்தா காரத்-இன் தங்கை
பிரிந்தா காரத் CPI(M)இன் தலைவர் பிரகாஷ் காரத்-இன் மனைவி
CPI(M)இன் பொலிட் பீரோ உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற தலைவர் சீத்தாராம் எச்சூரி
சீத்தாராம் எச்சூரி சீமா சிஷ்டியை மணந்து கொண்டார்
சீமா சிஷ்டி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதளின் தலைமை ஆசிரியர்
பர்க்கா தத் NDTV-இன் மூத்த நிருபர்
பர்க்கா தத்-இன் தங்கை பஹார் தத் CNN IBN-இன் மூத்த நிருபர், இவரை தனிப்பட்ட முறையில் பல எதிர்ப்புகளுக்கு நடுவே CNN IBN-ல் வேலைக்கு சேர்த்தவர் ராஜ்தீப் சர்தேசாய்
ராஜ்தீப் சர்தேசாய் மணந்து கொண்டது சகரிகா கோஷ்
சகரிகா கோஷ் CNN IBN-இன் மற்றுமொரு மூத்த நிருபர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர், மற்றும் இணை செய்தி ஆசிரியர்
சகரிகா கோஷ்-இன் தந்தை பாஸ்கர் கோஷ்
பாஸ்கர் கோஷ் தூர்தர்ஷன் தலைமை இயக்குனர்
சகரிகா கோஷ்-இன் அத்தை ரூமா பால்
ரூமா பால் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி
சகரிகா கோஷ்-இன் மற்றொரு அத்தை அருந்த்ததி கோஷ்
அருந்த்ததி கோஷ் ஐநா சபையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பதவியில் இருப்பவர்
செய்தியாளர் கரன் தாப்பரின்(இவரின் ஒரு பேட்டியின் போது தான் ஜெயலலிதா மைக்கை கழட்டி வைத்துவிட்டு வெளியேறியது) மாமாவின் மனைவி நயன்தாரா சகால்
இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும் கைவலிக்கிறது
இப்போது சொல்லுங்கள் இந்த ஊடகங்கள் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று
இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த தெளிவான விளக்கமும் அதன் பின் புலம் குறித்த
ஆசிரியர் வீரமணி அவர்களின் “2 ஜி
அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்”
என்ற இந்த நூலை இந்த சுட்டியில் https://bit.ly/2PXb7IK வாங்கிப் படியுங்கள் விலை ரூ.40 மட்டுமே/-

கருத்துகள் இல்லை: