வியாழன், 11 அக்டோபர், 2018

அதிமுக பாஜகவை ஆதரிக்கல்லியாம் ... முத்தலாக் நூல் வெளியீடு ... தேர்தலுக்கு அப்புறம்தான் ஆதரிப்பாங்க ?

டிஜிட்டல் திண்ணை: பாஜக எதிர்ப்பு: அதிமுகவின்  முத்தலாக் ஆயுதம்!மின்னம்பலம்: ஒரு அழைப்பிதழ் வந்து விழுந்தது. “இது வெறும் அழைப்பிதழ் மட்டுமல்ல... கூட்டணிகளை நிர்ணயிக்கப்போகும் அழைப்பிதழ் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது. பார்த்துக் கொண்டே இருங்கள் விரைவில் செய்தி வரும்’” என்று ஒரு முன்குறிப்பை அனுப்பியிருந்தது. அதை படித்து முடிக்கும் முன்பே அந்த அழைப்பிதழ் பற்றிய தகவல்களையும் டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“இந்தப் புத்தகத்துக்குள் போவதற்குள் ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக். முத்தலாக் சட்ட மசோதா கடந்த வருடம் டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் கொண்டுவரப்பட்டபோது அதை அதிமுக கடுமையாக எதிர்த்தது. அதையடுத்து இந்த வருடம் பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒட்டிய விவாதத்தில் அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசினார். ‘இதுவரை யாரும் செய்யாத வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஆள நீங்கள் முயற்சி செய்துவருகிறீர்கள். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்த அவையில் உரையாற்றிய டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர், ’முஸ்லிம் சமூகத்தினர் கிளர்ந்து எழும் வகையில் எந்த அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு ஒரு அரசு செயல்படுமானால் அது புத்திசுவாதீனமற்ற அரசாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன்’ என்று கூறினார். அம்பேத்கர் சொன்னதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
படித்தவன் தவறு செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்று மகாகவி பாரதியார் சொல்லியிருக்கிறார். நீங்கள் வேண்டுமென்றே தவறு இழைக்கிறீர்கள். உங்கள் முயற்சி வெற்றி பெறப்போவதில்லை’ என்று பேசினார் அன்வர் ராஜா.
இந்த உரை உட்பட நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா ஆற்றிய உரைகளைத் தொகுத்து, ‘முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல்’ என்ற தலைப்பில் புத்தகமாக ஆக்கியிருக்கிறார்கள். அன்வர் ராஜாவின் ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் புதுமடம் ஜாபர் அலிதான் இந்தப் புத்தகத்தை தொகுத்து வெளியிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பேஇந்த புத்தகம் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து அன்வர் ராஜா பேசியபோது, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று சொல்லி வந்திருக்கிறார் எடப்பாடி. அண்மையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வரிடம், ‘பாஜகவிடம் நாம் ஓவராக ஒட்டுகிறோம் என்ற பேச்சு அதிகமாகியிருக்கிறது. திமுக மீதும் மக்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. இந்த காரணத்தால்தான் ஆர்.கே.நகரில் நாம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை மொத்தமாக தினகரனிடம் பறிகொடுத்தோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாக அன்வர் ராஜாவைத் தொடர்புகொண்ட எடப்பாடி பழனிசாமி, அந்த முத்தலாக் புத்தகத்தை வெளியிடலாம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.
வரும் அக்டோபர் 22 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த விழா அழைப்பிதழில் முதல்வர், துணை முதல்வர் பெயர்கள் இல்லை. ஆனாலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையேற்று வெளியிடுகிறார். இந்த விழாவை அதிமுக முக்கியமாக கருதுகிறது என்பதற்காக செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், நிலோபர் கபில் ஆகிய ஆறு அமைச்சர்களையும் வாழ்த்துரை வழங்குமாறு முதல்வரே கேட்டுக்கொண்டிருக்கிறார்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வும் கலந்துகொள்கிறார். இதுமட்டுமல்ல.. இந்த விழாவில் இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ.வான முகமது அபுபக்கர், திமுக கூட்டணியோடு இணைந்து செயல்பட்டு வரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தலைவர் தெகலான் பாகவி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். இதன் மூலம் திமுகவுக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது அதிமுக.
இந்த புத்தக வெளியீட்டுவிழா மேடையில் பாஜகவுக்கு எதிரான கடுமையான பேச்சுகள் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து எடப்பாடியே விழாவுக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்” என்ற

கருத்துகள் இல்லை: