செவ்வாய், 9 அக்டோபர், 2018

மன்சூர் அலிகானின் 3 வது மனைவிமீது 2 ஆவது மனைவியின் வாரிசுகள் தாக்குதல் .. இரும்பு கம்பியால்

தாக்குதல்vikatan.com கலிலுல்லா.ச : மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதாவை, 2-வது மனைவியின் வாரிசுகள் இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லன் நடிகராகத் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மன்சூர் அலிகான். பொதுப் பிரச்னைகளுக்கு, அவ்வப்போது கருத்து தெரிவித்து வருபவர். சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு ஒரே கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார். மன்சூர் அலிகானின் இரண்டாவது மனைவி  பேபி என்கிற ஹமீதாவின்  வாரிசுகளான மகள் லைலா அலிகான் (22)  மகன் மீரான் அலிகான் ஆகியோர் மன்சூர் அலிகானின் 3-ஆவது மனைவி வஹிதாவை இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வஹிதா, ரத்தக் காயத்துடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தன்மீது தாக்குதல் நடக்கும் போது, மன்சூர் அலிகான் வேடிக்கைபார்த்ததாகவும், மன்சூர் அலிகான், ஹமீதா,  லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை: